எளிய அழகுக் குறிப்புகள் * சந்தனம் , முல்தானிமட்டி கலந்த , " பேஸ் பாக் ' உபயோகித்து வர , முகம் பொலிவாகவும் , மிருதுவாகவும் மாறும். * கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள் , எலுமிச்சை சாறு , ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி , காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ , முகம் மிருதுவாகும். * ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். * பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும். * 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து , முகத்தில் தடவி , ஒரு மணிநேரம் கழித்து , சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர , வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும். * தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும். * பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும். * பப்பாளி பழத்தை அரைத்து , முகத்தில் தொ...