முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பதை நீங்கள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி செய்வது, புகை பிடிக்காமல் இருப்பது, குடிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. .

ஒருவர் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருக்க முடியும்.. 

உங்களை ஆரோக்கியமாக வைக்க மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். 


1. மஞ்சள்



நமது வீடுகளில் பொதுவாக இருக்கக்கூடிய ஒன்றான மஞ்சள் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் மருத்துவ குணங்களுக்காக மிகவும் மதிப்புடையதாக கருதப்படுகிறது. மஞ்சளில் அதிகளவு காணப்படும் குர்குமின்  உள்ளது அழற்ச்சி எதிர்ப்பு மூலப் பொருளாகும். மஞ்சள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் உணவில் பயண்படுத்த வேண்டும். 


2. தேன்



இயற்கையான தேனில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளது. தேனில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் மிகுதியாக உள்ளது. தேனில் அதிகமாக உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொண்டையை இதமாக்கி, உடலை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் குடல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தேனில் உள்ள பிரக்டோஸ்  மற்றும் குளுக்கோஸ் இணைந்து நீடித்த ஊக்கத்தை அளிப்பதால் இது ஆற்றல் அதிகரிக்கும் உணவாகும். செரிமான கோளாறுகளை சரிச்செய்யகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


3. 

இஞ்சி


இஞ்சியில் ஜின்ஜெரால் என்னும் ஆக்டிவ் பொருள் உள்ளது. இது உடலுக்கு வலி நிவாரணி, மயக்க மருந்து, ஆன்டி-பைரிடிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் விளைவுகளைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வளமான அளவில் உள்ளது. இதனால் இஞ்சி செரிமான மண்டலத்திற்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மாதவிடாய் வலியைக் குறைக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் மற்றும் பலவற்றிற்கும் நல்லது என்று கூறப்படுகிறது.




4. நெல்லிக்காய்





நெல்லிக்காயில் அதிக நார்ச்சத்து உள்ளதால் இது உடல் எடையை குறைக்கவும் நல்லது. நெல்லிக்காயை பச்சையாகவோ அல்லது சாறு எடுத்தோ சாப்பிடலாம். காய்ச்சல், தொண்டை வலி, செரிமான கோளாறுகள் போன்ற பொதுவான பிரச்சனைகளை விரட்டுவதற்காக இது நன்கு அறியப்பட்டதாகும். இந்திய வீடுகளில் ஊறுகாய் செய்வதற்காக பல காலங்களாக இது பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், தொண்டை வலி, செரிமான கோளாறுகள் போன்ற பொதுவான பிரச்சனைகளை விரட்டுவதற்காக இது நன்கு அறியப்பட்டதாகும். ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றது. நெல்லிக்காய் கண் பார்வை, முடி வளர்ச்சி, இருதயம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றுக்கு நல்லது. 


5. கிரீன் டீ

கிரீன் டீயை தவறாமல் குடிப்பதால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறும். இதில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. கிரீன் டீயில் உள்ள பாலிபினால்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.  கிரீன் டீ உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. ஒரு கப் சூடான கீரீன் டீயை காலையில் குடித்தால் அது நமக்கு புத்துணர்ச்சியைத் அதிகரிக்கிறது. நமது உடலை சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு கிரீன் டீயில் நமது தோலை பளபளக்க செய்ய தேவையான ஊட்டசத்துக்களும் மிகுதியாக இருக்கிறது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...