முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைவண்ணம்.. கலக்கல் வருமானம் !


ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பரிசுப்பொருட்களாக வழங்குகிறோம். இவற்றை இணைத்து புதுவிதமாக, கலைநயத்துடன் கூடிய பரிசுப்பொருளாக வழங்கினால் அனைவரையும் ஈர்க்கும். இதையே தொழிலாக மேற்கொண்டால், வீட்டில் இருந்தபடியே வருவாய் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த உமாதேவி. அவர் கூறியதாவது:  கல்லூரி படிப்பை முடித்தது முதலே சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. திருமணத்துக்கு பிறகு கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக தொழிற்பயிற்சி மையத்தில் சேர்ந்து தையல், ஓவியம், பரிசு பொருட்கள், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி பெற்றேன். பரிசுப்பொருள் தயாரிப்பை ஒரு வாரத்தில் கற்றேன். ஓவியத்தில் ஆர்வம் இருந்ததால், ஓவியம், சிற்பத்திறமையை இணைத்து பரிசு பொருட் களை செய்து பார்த்தேன்.

அதை உறவினர், நண்பர்களின் குடும்ப விழா, பிறந்த நாள் விழாவின்போது அளித்தேன். அது அவர்களை கவர்ந்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பரிசுப்பொருட்களை தயாரித்து தருமாறு கூறினார்கள். நாளடைவில் இதற்கு உள்ள வரவேற்பை பார்த்து, இதையே தொழிலாக செய்யலாம் என்று கணவர் யோசனை கூறினார். அதன்படி பல்வேறு பரிசு பொருட்களை தயாரித்து எனது பகுதியில் உள்ள பரிசு பொருட்கள் விற்கும் கடை களில் காட்சிக்கு வைத்தேன். அது விற்பனையானது. கடைக்காரர்கள் தொடர்ந்து பல்வேறு பரிசு பொருட் களை செய்து தருமாறு ஆர்டர் கொடுத்தனர். வீட்டு வேலை போக மீதமுள்ள நேரங்களில் தொடர்ந்து தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறேன். பயிற்சி மையங்களில் மற்றவர்களுக்கு கட்டண முறையில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறேன். இத்தொழிலை துவங்க முதலீடு பெரிய அளவில் தேவை இல்லை. பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் தயாரிக்கலாம். புதுப்புது வடிவத்திற்கேற்ப விற்பனை அதிகரிக்கும்.


முதலீடு: முதல்கட்ட உற்பத்திக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம், அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் இருந்தால் போதும். உற்பத்தி செலவு: தினசரி 3 மணி நேரத்தில் ஒரு போர்டு வீதம் மாதம் 30 போர்டுகள் தயாரிக்கலாம். இதற்கு தேவையான போர்டு விலை ரூ.1,200, வெள்ளை களிமண் (எம்.சீல்) ரூ.720, பேர்ல் மற்றும் பேப்ரிக் கலர் பெயின்ட் பாக்ஸ் ரூ2,500, எனாமல் கலர் ரூ.300, சாக் பவுடர் ரூ.1,225, இதர செலவுகள் ரூ.300 என மொத்தம் ரூ.6,245 செலவாகும். உற்பத்தி செலவு கலை வடிவத்திற்கு ஏற்ப மாறும். பெயின்ட், சாக் பவுடர் ஆகியவை ஓரளவு மீதமாகும் வாய்ப்புள்ளது.

வருவாய்: சிற்ப ஓவிய போர்டு ஒவ்வொன்றையும் குறைந்தபட்சம் ரூ.300க்கு விற்கலாம். இதன் மூலம் மாத வருவாய் ரூ.9,000. செலவு போக மாதம் ரூ.3 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இது தினசரி 3 மணி நேரத்திற்கு கிடைக்கும் உழைப்பு கூலியாக, மாத வருவாயாக எடுத்து கொள்ளலாம். கூடுதல் நேரம் ஒதுக்கி தினசரி மேலும் 2 போர்டுகள் செய்தால், மாத லாபம் ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை கிடைக்கும். மேலும் படைப்பின் அழகு, வசீகரத்திற்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் வரை கூட விலை நிர்ணயித்து விற்கலாம். லாபம் பல மடங்கு கிடைக்கும்.

சந்தைவாய்ப்பு: பரிசு பொருட்களுக்கு எப்போதும் விற்பனை வாய்ப்புகள் அதிகம். பிறந்த நாள், திருமணநாள், குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு பரிசு பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஓவிய சிற்ப பரிசு பொருட்களின் புதுவித வடிவமைப்புகள் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.
 தீபாவளி, புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை அதிகம் இருக்கும். கைவினை திறனுள்ள ஆட்களை நியமித்து பரிசுப் பொருட்களை அதிகளவில் தயாரித்தால் முக்கிய நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பலாம். பயிற்சிக்கு: மாவட்ட தலைநகரங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மகளிர் குழு அமைப்புகள் பரிசு பொருட்களுக்கான பயிற்சியை வழங்குகிறது. தனிப்பட்ட முறையிலும் சிலர் பயிற்சி அளிக்கிறார்கள். ஓவியம், கலை உணர்வு இருந்தால் 2 வாரத்தில் கற்றுக்கொள்ளலாம்.

தயாரிப்பது எப்படி?

கார்டுபோர்டை ஏ4 சைஸ் அல்லது தேவையான அளவுகளில் வெட்டிக் கொள்ள வேண்டும். பசையை தடவி சாக் பவுடரை தூவி நிரப்ப வேண்டும். சற்று காய்ந்ததும், அதில் வெள்ளை களிமண்ணை தேவையான உருவங்களில் வடிவமைத்து ஒட்ட வைக்க வேண்டும். அது கடவுள், பூக்கள், கார்ட்டூன் என எந்த உருவமாகவும் இருக்கலாம்.  அவற்றை மீண்டும் நன்றாக காயவைத்த பின்பு, போர்டு மற்றும் உருவத்தின் மீது எனாமல், பேர்ல், பேப்ரிக் ஆகிய பெயின்ட் வகைகளில் ஒன்றை பிரஷ் மூலம் வண்ணம் பூச வேண்டும். எந்தெந்த இடங்களில் எந்த வண்ணம் பூச வேண்டும் என்பது முக்கியம். சில இடங்களில் குறிப்பிட்ட நிறங்களை தான் பயன்படுத்த வேண்டும். வண்ணம் பூசிய பின்னர் மீண்டும் சில நிமிடங்கள் காயவைத்து, அதன் மீது வார்னிஷ் அடித்து 2 மணி நேரம் காய வைத்தால் கார்டுபோர்டு சிற்ப ஓவியம் தயாராகிவிடும்.  கார்டு போர்டில் உருவத்தை நாமே உருவாக்குவதற்கு பதில் ரெடிமேடு உருவங்களையும் பொருத்தி, புதிய வடிவத்தை உருவாக்கலாம். சில போர்டுகளுக்கு பார்டர் தேவைப்படும். அதற்கேற்றாற்போல் சாக்பவுடர், பசை, வெள்ளை களிமண் (எம்.சீல்) கொண்டே பார்டர் உருவாக்கலாம்.

போர்டுக்கு பதிலாக ஜார்களிலும் இதே பாணியில் ஓவிய சிற்பம் உருவாக்கலாம்.  கட்டமைப்பு: வீட்டில் நாம் பயன்படுத்தும் அறையே போதுமானது. தரையிலோ, டேபிள் சேர் மீது அமர்ந்தோ தயாரிக்கலாம். தயாரித்த பொருட்களை இருப்பு வைக்க வீட்டின் ஷெல்ப் அல்லது பெட்டி போதும். தேவையான பொருட்கள்: கார்டுபோர்டு, சாக் பவுடர், வெள்ளை களிமண்(எம் சீல்), எனாமல் பெயின்ட், பல வகை பிரஷ்கள், பசை, வார்னிஷ் மற்றும் பல்வேறு வண்ணங்களில் பேர்ல் மற்றும் பேப்ரிக் பெயின்ட். கிடைக்கும் இடங்கள்: டிராயிங் ஸ்டேஷனரி கடைகள் அனைத்திலும் கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...