முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலைவண்ணம்.. கலக்கல் வருமானம் !

ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பரிசுப்பொருட்களாக வழங்குகிறோம். இவற்றை இணைத்து புதுவிதமாக, கலைநயத்துடன் கூடிய பரிசுப்பொருளாக வழங்கினால் அனைவரையும் ஈர்க்கும். இதையே தொழிலாக மேற்கொண்டால், வீட்டில் இருந்தபடியே வருவாய் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த உமாதேவி. அவர் கூறியதாவது:  கல்லூரி படிப்பை முடித்தது முதலே சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. திருமணத்துக்கு பிறகு கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக தொழிற்பயிற்சி மையத்தில் சேர்ந்து தையல், ஓவியம், பரிசு பொருட்கள், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி பெற்றேன். பரிசுப்பொருள் தயாரிப்பை ஒரு வாரத்தில் கற்றேன். ஓவியத்தில் ஆர்வம் இருந்ததால், ஓவியம், சிற்பத்திறமையை இணைத்து பரிசு பொருட் களை செய்து பார்த்தேன். அதை உறவினர், நண்பர்களின் குடும்ப விழா, பிறந்த நாள் விழாவின்போது அளித்தேன். அது அவர்களை கவர்ந்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பரிசுப்பொருட்களை தயாரித்து தருமாறு கூறினார்கள். நாளடைவில் இதற்கு உள்ள வரவேற்பை பார்த்து, இதையே தொழிலாக செய்யலாம் என்று கணவர் யோசனை கூறினார். அதன்படி பல்வேறு பரிசு பொருட்களை தயாரித்து எனது...

பேப்பர் தட்டு தயாரிப்பில் பிரமாத லாபம்

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் உள்ள கற்பகவிருட்சம் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுகுணா. அவர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் குழுவை துவக்கினோம்.  உறுப்பினர்கள் 5 பேர் சேர்ந்து, பேப்பர் பிளேட் தயாரிக்க பயிற்சி பெற்றோம். வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தொழிலுக்கு தேவையான மெஷின்களை நிறுவினோம். 5 பேரும் பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு பேப்பர் பிளேட் தயாரிக்கும் பணிகளை தொடங்குவோம். ஒருவர் பேப்பரை கட்டிங் செய்யும் இயந்திரத்தையும், மற்றொருவர் பிளேட் தயாரிக்கும் மெஷினையும் இயக்குவோம். மற்ற 2 பேர் பேக்கிங் செய்வார்கள். உற்பத்தியோடு விற்பனையையும் நாங்களே கவனிக்கிறோம். மின் தடை இல்லாமல் இருந்தால், ஒரு நாளில் 10 ஆயிரம் பிளேட் தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசா லாபம். மாதம் ரூ.18 ஆயிரம் வங்கிக்கு செலுத்து...

லாபம் கொழிக்கும் கூடை பொம்மை தயாரிப்பு!

சந்தோஷமான தருணங்களில், ஒருவருக்கு வழங்கும் பரிசுப்பொருட்கள் அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக மாற்றும். பரிசுப்பொருள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெறுபவர் மனதைக் கவர்வதாக இருக்க வேண்டும். விலை குறைந்த, அதே நேரம் பாரம்பரியம், நவீனம் கலந்து  சிறப்பாக வடிவமைக்கப்படும் கூடை பொம்மைகள், பரிசுப்பொருளாக வழங்க நல்ல தேர்வு.  கூடை பொம்மைகள் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காந்திபுரத்தை சேர்ந்த பத்மா. அவர் கூறியதாவது: 15 ஆண்டுகளுக்கு முன்பு கைவினைப்பொருட்கள் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. பரிசு பொருள் விற்கப்படும் பொம்மைகள் செய்து கடைகளுக்கு விற்றேன். படிப்படியாக பல்வேறு வகையான பொம்மைகளை தயாரித்தேன். திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களிடம் வெளிநாட்டு வர்த்தகர்கள் ஆர்கானிக் காட்டன் பொம்மைகள் செய்து தர ஆர்டர் கொடுத்தனர். ஆர்டர் எடுத்த நிறுவனங்கள் என்னிடம் பொம்மைகள் தயாரித்து வாங்கி ஏற்றுமதி செய்தனர். இதன் மூலம் தொழில் பெருகியது. பொதுவாக பொம்மைகள் செய்வது கை தையல் மூலம் தான். உற்பத்தி அதிகம் செய்ய வேண்டி வந்ததால் பவர் தையல் மெஷின் மூலம் பெரிய ப...

லாபம் தரும் காகித பை தயாரிப்பு

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். காகிதப் பைகள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம் என்கிறார் காகிதப் பை வகைகள் ஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பல முறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என விதவிதமான வகைகள் உள்ளன. தேவைப்படும் பொருட்கள்: பழைய அல்லது புதிய பேப்பர்கள். பேப்பரின் வகைகளான டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன்ஷீட், சார்ட் ஆகியவை. இயந்திரம்: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின். உற்பத்தி பொருட்கள்: மெட்டல் வளையம், பசை, கைப்பிடிக்குத் தேவையான கயிறு. கிடைக்கும் இடங்கள்: பேப்பர்கள் பழைய பேப்பர் கடைகளிலும், கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் சென்னை, பெங்களூர், கோவை, ஐதராபாத் நகரங்களிலும், இதர வகை பேப்பர்கள் மற்றும் பொருள்கள் சிறு மற்றும் பெரு நகர ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களிலும் கிடைக்கும். தயாரிப்பது எப்படி?  எந்த வகை ...

ஈமு கோழி வளர்ப்பது எப்படி?

ஈமு கோழி வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ நடத்திவரும் எம்ஜிஎஸ்.அவர் கூறியதாவது: நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைபார்த்து வந்தேன். விவசாயம் மற்றும் பண்ணைகள் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் தெரிந்து கொள்வேன். ஆந்திரா, புதுவை ஆகிய இடங்களில் உள்ள பண்ணைகளுக்கு சென்று ஈமு கோழி வளர்ப்பு குறித்து முழுமையாக அறிந்துகொண்டேன். 2004ம் ஆண்டு 5 ஜோடி ஈமு கோழிகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும்  வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த் தேன். ஈமு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் ஈமு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் ஈமுவை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன்.  சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப...

கிழங்கு சிப்ஸ்.. கலக்கல் லாபம்!

மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்  என்றால் சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். தரமான, சுவையான மரவள்ளி சிப்ஸை தயாரித்து வழங்கினால் நன்றாக சம்பாதிக்க லாம் என்கிறார் ஈரோடு மாவட்டம்  காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த மரவள்ளி சிப்ஸ் விற்பனையாளர் மஞ்சுளா. அவர் கூறியதாவது: வீட்டிலேயே வடகம், ஊறுகாய் போன்றவற்றை தயாரித்து அருகில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் விற்று வந்தேன். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை. வேறு தொழில் செய்ய நினைத்தபோது, முதலீடு அதிகம் தேவைப்பட்டது. குறைந்த முதலீட்டில் எளிதாக தொழில் செய்ய முயற்சித்தபோது, மளிகை கடைகளிலும், வீடுகளிலும் சிப்ஸ் வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். சிப்ஸ் தயாரிப்பது தொடர்பான தொழில்  முறைகளை கற்றுக்கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவினருடன் இணைந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு மரவள்ளி கிழங்கு சிப்ஸ் தயாரிக்க தொடங்கினேன். ஒரு சிப்ஸ் மாஸ்டர், மரவள்ளியை உரிக்க 2 தொழிலாளர்கள் இருந்தால் போதும். கடைகளுக்கு  சப்ளை செய்ய தகுதிக்கு ஏற்ப ஒரு மொபட் அல்லது ஆட்டோ தேவைப்படும். ஒரு டன் சிப்ஸ்...

பொக்கே தயாரிப்பில் பொங்குது லாபம்!

பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் முதல் நோயாளிகள் நலம் பெற வாழ்த்துவது வரை பொக்கே முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வீடுகள், அலுவலக வரவேற்பறைகளில் மணமும், அழகும் கொண்ட ஜார் மற்றும் கப் பொக்கேவை தினசரி அமைப்பது பேஷனாகி விட்டது. இந்த காரணங்களால் பொக்கே தயாரிப்பது லாபகரமான தொழிலாக உள்ளது என்கிறார் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆர்கிட்ஸ் என்ற பெயரில் பொக்கே ஷாப் நடத்தி வரும் குருபரசிங். அவர் கூறியதாவது: கண்ணை கவரும் பொக்கேக்களுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து இத்தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன்.  கோவையில்ள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பொக்கே ஷாப்பில் வேலைக்கு சேர்ந்து தொழில்நுணுக்கங்களை கற்றேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு பொக்கே ஷாப் துவங்கினேன். தொழில் போட்டியை சமாளிக்க புதுமைகளை புகுத்தினேன். மலர்கள், வண்ணங்கள், கலை வேலைப்பாடுகளில் அதிக கவனம் செலுத்தினேன். இதனால் நான் தயாரித்த பொக்கே பலரையும் கவர்ந்தது. வாடிக்கையாளர்களும் பெருகினார்கள். சென்னை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்பட பல நகரங்களில் எனக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அவர்கள் இங்குள்ள உறவினர்கள், நண்பர்களின் வீ...

முயல் வளர்த்தால் முன்னேற்றம்

ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. இத்தொழிலின் முக்கியத்துவம் கருதி, கோவை கால்நடை பல்கலைக்கழகத்தில் முயல் வளர்ப்பு பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வம். டெய்லரான இவர், பகுதி நேரமாக வீட்டிலேயே முயல் வளர்க்க துவங்கினார். இப்போது ஏகப்பட்ட கிராக்கி. தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது: முயல் குட்டி ஒரு மாசம் வரை தாயுடன் இருக்கணும். அதுவரை தாய்ப்பால் குடிக்கணும். முதல்ல... 20 நாளில் குட்டியை பிரிச்சுட்டேன். 40 குட்டிகள் இறந்திடுச்சு. கோவை கால்நடை பல்கலை.யில் முயல் வளர்ப்பு பயிற்சி கத்து கொடுத்தாங்க. அவங்க சொன்னபடி முயல் வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு  குட்டியைக் கூட நான் இழக்கல. முயலையோ, முயல் கறியையோ முதலில் யாரும் வாங்கல. சமைக்கத் தெரியாது; ருசி பழக்கமில்லைனு சொன்னாங்க. நானே அதை சமைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவங்களுக்குக் கொடுத்தேன். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்போ நல்ல கிராக்கி. ஒரு கிலோ ரூ.200க்க...

வசீகர சேலைகள்.. வருவாய் பிரமாதம்

‘பேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் உள்ளதாக மிளிர செய்யும். இது பெண்களின் புதிய பேஷனாக உருவாகியுள்ளது. சேலைகளில் பேப்ரிக் பெயின்டிங் செய்ய கற்றுக்கொண்டால் வீட்டு பெண்கள் நல்ல வருவாய் ஈட்டலாம்’ என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த கீதா. கீதா கூறியதாவது: கணவர் செல்வம், வங்கி அதிகாரி. நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்பர் ஆகி, அங்கு வசித்தபோது டிவி நிகழ்ச்சி ஒன்றில், பேப்ரிக் பெயின்டிங் கற்றுக்கொண்டால் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று கூறி செயல்விளக்கத்தையும் காட்டினர். இது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஓவியம், எம்ப்ராய்டரி பயிற்சி பெற்றேன். அருகில் வசிக்கும் பெண்களின் சேலைகளுக்கு இலவசமாக பேப்ரிக் பெயின்டிங் செய்து கொடுத்தேன். ‘சாதாரண சேலைய கூட சூப்பரா பண்ணீட்டீங்களே...’ என்று பெண்கள் பாராட்டினர்.  பலர் என்னிடம் சேலைகளை கொடுத்து பெயின்டிங் செய்து கொடுக்குமாறு கூறினர். குறைந்த கட்டணம் நிர்ணயித்து தொழிலை துவக்கினேன்.  ஓரளவு வருமானம் கிடைத்தது. கணவர் கோபிச்செட்டிபாளையம் டிரான்ஸ்பர் ஆனார். இது போன்ற சிறிய நகரங்களில் சேலைகளில் ஆடம்பரமான, அழகான வ...

லாபம் கொழிக்கும் பேரீச்சை வளர்ப்பு!

பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம்.  உரிய முறையில் பேரிச்சையை  சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத்தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர்ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருகவேல். அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் ரெடிமேடு ஆடை தயாரிப்பு தொழில் செய்தேன். அதில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டு அதிலும் நஷ்டம்  ஏற்பட்டு பணம் எல்லாம் இழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்ற விவசாயி புதிய ரக திசு பேரீச்சையை வளர்த்து லாபம்  சம்பாதிப்பது பற்றி தெரிய வந்தது.  அங்கு சென்று விவரங்களை கேட்டேன். நிச்சயம் இதில் நல்ல லாபம்  சம்பாதிக்கலாம் என நம்பிக்கை துளிர்த்தது. கையில் காசில்லாத நிலையில்,  இடத்தை விற்று பேரீச்சை சாகுபடியில் ஈடுபட்டேன். இது புது வகையான திசு வளர்ப்பு பேரீச்சை. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது. இங்கிலாந்தில் மட்டும் ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திசு கன்றுகள் வளைகுடா நாடுகளில் பராமரிக்கப்பட்டு, பின...

கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!

சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை.  மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது: நான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறேன். இதற்கு  வங்கிக் கடன் உதவி எளிதாக கிடைப்பதால், பண்ணை அமைத்து கூண்டு முறையில் 24 ஆயிரம் கோழிகளை வளர்க்கிறேன். கோழி வளர்ப்பில் முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில்  கிடைக்கும் முட்டைகளை விற்று  அதன்மூலம், அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்கலாம். அரவை இயந்திரம் வாங்கி தீவனத்தை நாமே அரைத்து கொண்டால் செலவு மிச்சமாகும். தீவனத்துக்கு தேவையான தானியங்கள் விலை குறையும்போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம். நாமக்கல், ப...

மணப்பெண் அலங்காரம்.. மங்கையருக்கு வருமானம்!

மணப்பெண் அலங்காரம், மெஹந்தி போடுதல் போன்றவற்றை முறையாக கற்றுக் கொண்டால் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலில் அணையாவிளக்கு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த கலை வாணி. அவர் கூறியதாவது:பிஎஸ்சி படித்தவுடன் மணப்பெண் அலங்காரம், மெஹந்தி போடுதல் பற்றி பயின்றேன். நாயக்கன்பாளையத்தில் எனது வீட்டில் இருந்தபடி தெரிந்தவர்களின் திருமணம், நிச்சயதார்த்தத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு மெஹந்தி அலங்காரம் செய்து வந்தேன். ஓரளவு வருமானம் கிடைத்தது. திருமணமாகி அதே பகுதியில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு அங்குள்ள பெண்களுடன் சேர்ந்து அணையா விளக்கு என்ற மகளிர் சுய உதவி குழு அமைத்தேன். பிறகு கோவை டவுன்ஹாலில் பியூட்டி பார்லர் துவக்கினோம். அதை அலுவலகமாக வைத்துக்கொண்டு, 2 ஆண்டுகளாக வெளியிடங்களுக்கு சென்று மணப் பெண், மெஹந்தி அலங்காரங்கள் செய்து வருகிறேன். முகூர்த்த நாட்களில் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதில் முறையான பயிற்சி, பொறுமை, ஆர்வம் இருக்கவேண்டும். நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்துக்கு செல்வது அவசியம். அவசரகதியில் செய்தால், அலங்காரம் நன்றாக இருக்காது. மணப்பெண்ணுக்கு ஒரு மாதத்துக்கு முன்...

கொப்பரை தேங்காய்.. கொழிக்குது காசு!

தேங்காய் ஆண்டு முழுவதும் உற்பத்தியாக கூடியது. நம் நாட்டில் விளையும் தேங்காயில் 75 சதவீதம் கொப்பரை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் தொழிலை தங்குதடையின்றி மேற்கொள்ள முடியும். நல்ல லாபமும் கிடைக்கும் என்கிறார் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம்  எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த கொப்பரை உற்பத்தியாளர் பஞ்சலிங்கம். அவர் கூறியதாவது: காய வைத்த தேங்காய் பருப்புதான் கொப்பரை. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. எனவே கொப்பரை தயாரிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளேன். கொப்பரை தயாரிப்பில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அடிக்கடி மழை மற்றும் குளிர் நிலவுவது, கொப்பரை உற்பத்திக்கு பாதகம். மற்ற மாவட்டங்களில் தென்னை சாகுபடி குறைவாக இருந்தாலும், கொப்பரை காய வைப்பதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அங்கு உள்ளவர்கள் இப்பகுதியில் தேங்காய் வாங்கி கொப்பரை தயாரிப்பில் ஈடு பட்டால் நல்ல வருமானம் பார்க்கலாம். தேங்காய் விலை ஏற்ற, இறக்கம்உள்ளது. கொப்பரை உற்பத்தி செய்ய ச...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...

மூலிகை டீ முத்தான லாபம்!

உடல்நலனுக்கு சிறந்த மூலிகை டீ, காபித்தூள் தயாரிப்பது எளிதானது. ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மூலிகை டீ, காபித்தூள் தயாரித்து விற்றால்  நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார் கோவை, கோவைப்புதூர் பரிபூர்ணா எஸ்டேட்டில் தி யுனிவர்சல் குட்லைப் சென்டர் நடத்தி வரும் விநாயகம். அவர் கூறியதாவது: சிறுவனாக இருந்தபோது, தந்தை ஏலக்காய் டீ, சுக்கு காபி தயாரித்து விற்று வந்தார். பின்னர் மூலிகை டீ, காபித்தூள் விற்றார். அவருக்கு பின், நான் இந்த தொழிலை தொடர்ந்தேன். அதோடு, மூலிகை பல்பொடி, வல் லாரை, தூதுவளை, அருகம்புல் ஜூஸ், முகத்தை பளிச்சென்று வைத்து கொள்ள மூலிகை பேஸ்ட் உள்பட 150 வகை  மூலிகை பொடிகளை தயாரித்து விற்கிறேன். வீடுகளுக்கு நேரடி யாக சென்று விற்று வருகிறேன். ஒரு தடவை வாங்குபவர்கள் தொடர்ந்து வாங்குவதால், வாடிக்கையாளர்கள் அதிகரித்துவருகின்றனர். வழக்கமாக டீ, காபி அதிகம் குடித்தால் பித்தம் என்பர். தலைவலி, சளி, அஜீரணம், பசியின்மையை மூலிகை டீ நீக்கும். மூலிகை காபி ரத்த அணுக்களை அதிகப்படுத்தும். உடல் வலிமை, புத்துணர்ச்சி ஏற்படும். மூலிகைகள் பக்க விளைவுகள் இல்லா தவை. உணவா...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பில் கலக்கல் வருமானம்!

செங்கல்லுக்கு மாற்றாக ஹாலோபிளாக் கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஹாலோபிளாக் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இத்தொழிலில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறார் கோவை நல்லாம்பாளையத்தில் குட்டியப்பா ஹாலோபிளாக் நிறுவனம் நடத்தி வரும் நடராஜன். அவர் கூறியதாவது: 22 ஆண்டுகள் மில்லில் பணிபுரிந்து, 5 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். ரூ.5 லட்சம் கிடைத்தது. ஹாலோபிளாக் நிறுவனம் நடத்திவரும் உறவினரிடம் பயிற்சி பெற்றேன். கோவை சிறுதொழில் சேவை மையத்தினர் வழிகாட்டினர். வீட்டு முன்பு இருந்த சொந்த இடத்திலேயே தொழில் துவங்கினேன். வீட்டில் இருந்த போர்வெல் மூலம் தேவையான தண்ணீர் கிடைத்தது. அதிகளவில் விற்பனையாக கூடிய ஹாலோபிளாக், சாலிட் பிளாக் அச்சுகளை மட்டும் வாங்கி, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கினேன். தொழில் நல்லபடியாக விரிவடைந்த பின்னர் மற்ற அச்சுகளை வாங்கி னேன்.  8 சட்டி ஜல்லி, 4 சட்டி கிரஷர், 1 சட்டி சிமென்ட் கொண்டு தயாரித்தால் தரமான ஹாலோபிளாக், சாலிட்பிளாக் கற்கள் கிடைக்கும். லாரியில் ஏற்றும்போது தவறி விழுந்தாலும் உடையாது. இதனால் கட்டப்படும் கட்டிடம் உறுதியாக இருக்கும். ஹா...