முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணப்பெண் அலங்காரம்.. மங்கையருக்கு வருமானம்!





மணப்பெண் அலங்காரம், மெஹந்தி போடுதல் போன்றவற்றை முறையாக கற்றுக் கொண்டால் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலில் அணையாவிளக்கு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த கலை வாணி. அவர் கூறியதாவது:பிஎஸ்சி படித்தவுடன் மணப்பெண் அலங்காரம், மெஹந்தி போடுதல் பற்றி பயின்றேன். நாயக்கன்பாளையத்தில் எனது வீட்டில் இருந்தபடி தெரிந்தவர்களின் திருமணம், நிச்சயதார்த்தத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு மெஹந்தி அலங்காரம் செய்து வந்தேன். ஓரளவு வருமானம் கிடைத்தது.

திருமணமாகி அதே பகுதியில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு அங்குள்ள பெண்களுடன் சேர்ந்து அணையா விளக்கு என்ற மகளிர் சுய உதவி குழு அமைத்தேன். பிறகு கோவை டவுன்ஹாலில் பியூட்டி பார்லர் துவக்கினோம். அதை அலுவலகமாக வைத்துக்கொண்டு, 2 ஆண்டுகளாக வெளியிடங்களுக்கு சென்று மணப் பெண், மெஹந்தி அலங்காரங்கள் செய்து வருகிறேன்.
முகூர்த்த நாட்களில் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதில் முறையான பயிற்சி, பொறுமை, ஆர்வம் இருக்கவேண்டும். நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்துக்கு செல்வது அவசியம். அவசரகதியில் செய்தால், அலங்காரம் நன்றாக இருக்காது.


மணப்பெண்ணுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தே சரும பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். நிகழ்ச்சிக்கு முன்னதாக மட்டும் மற்ற அலங்காரங்களை செய்ய வேண்டும்.  எண்ணெய் பிசுபிசுப்பில்லாத, நிலைத்து நிற்கக்கூடிய மேக்கப் சாதனங்களை பகல் நேரத்தில் மணமகளுக்கு பயன்படுத்த வேண்டும். மாலை, இரவு நேரங்களில் வேறு விதமான மேக்கப் யுக்திகளை கையாளலாம். 


மணப்பெண் அலங்காரத்துக்கு ஒரு மணி நேரம் போதும். மெஹந்திக்கு 2 மணி நேரம். சிவந்த நிறமுள்ளவர்களுக்கு தனியாகவும், மாநிறம் மற்றும் கறுப்பு நிறத்தவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற கலரை தேர்வு செய்தும் மெஹந்தி போட வேண்டும். புடவை நிறத்துக்கேற்ப போடும் கலர் மெஹந்தியை நிகழ்ச்சியின் 2 மணி நேரத்துக்கு முன்பாக போட வேண்டும். வழக்கமான மெஹந்தி என்றால் ஒரு நாளுக்கு முன்பு போட வேண்டும். மெஹந்தி போடும்போது, பழைய பாணியை பின்பற்றாமல், புதிய டிசைன்கள் போடுவது பலரையும் கவரும். இதற்கு அழகுணர்ச்சியும்,  கற்பனை திறனும் அவசியம். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க தொழில் சிறக்கும். வீட்டில் இருந்தவாறே வெளியிடங்களுக்கு சென்று மணப்பெண் அலங்காரம், மெஹந்தி போடும் பணி மேற்கொண்டால் குறைந்த முதலீட்டில் நல்ல வருவாய் கிடைக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...