முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வண்ண மீன் வளர்ப்பு





இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே வருவாய் ஈட்ட வழிகாட்டுகிறது. வண்ண மீன் வளர்ப்பு + விற்பனைத்தொழில்.
இந்தியாவில் கடல் மற்றும் குளம், குட்டைகளில் வளரக் கூடிய ஆயிரக்கணக்கான வண்ண மீன்கள் உள்ளன. இவற்றை நம் வீடுகளில் எந்த சீதோஷண நிலையிலும் வளர்க்க முடியும். கண்ணாடி பாட்டில் முதல் பெரிய அளவிலான தொட்டிகள் வரை அமைத்து இவற்றை வளர்க்கலாம்.
நாள்தோறும் காலை, மாலை நேரத்தில் சில நிமிடங்கள் இவற்றின் பராமரிப்புக்கு ஒதுக்கினால் போதும். இல்லத்தரசிகள் இத்தொழில் மூலம் வருமானம் காணலாம்.
வண்ண மீண்களுக்கு தற்போது நல்ல விற்பனை சந்தை உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தை நம்புவோர் சைனீஸ் ஃபெங்சூயி முறை வாஸ்து பரிகாரமாக மீன் தொட்டிகளை வீடுகளில் வைப்பதுண்டு. இன்றைக்கு இத்தகைய மீன்தொட்டிகளை வைப்போரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
உள்ளூர் விற்பனை தவிர வெளியூர்களுக்கும் இந்த மீன்களை பெரிய அளவில் எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வெளி நாடுகளுக்கும் இந்த மீன்கள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு பெருகியுள்ளது.
இந்த வண்ண மீன்களுக்கான உணவு பாக்கெட்டுகள் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. விலையும் சொற்பமே. வண்ண மீன்கள் வளர்ப்பதற்கு ஒரு முறை சொற்ப அளவில் முதலீடு செய்தாலே போதும்.
ஒரு ஜோடி வண்ண மீன்களை ரூ.5-க்கு விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூ.1000 எளிதாக சம்பாதிக்க இயலும்.
அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் வண்ண மீன்கள் வளர்ப்பது, அதிகம் காணப்படுகிறது. உலக அளவில் செல்லப் பிராணிகளை வளர்ப்போரின் எண்ணிக்கைக்கு அதிகமாக வண்ண மீன்கள் வளர்ப்போர் எண்ணிக்கையும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
உலகில் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் பெறுவது புகைப்படம் எடுப்பது, அடுத்து வண்ண மீன்கள் வளர்ப்பது என்பதை மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
வண்ண மீன்கள் ஓட்டல்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், நீண்டநேரம் பொது மக்கள் காத்திருக்கும் இடங்கள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் ஆகியவற்றில் இடம்பெற்று வருகின்றன.
வீடுகளில் இவை அழகு அம்சமாக இடம் பெறுகின்றன. வெளியில் சென்று மன அழுத்தத்தோடு வீடு திரும்பும் நிலையில் இந்த மீன்களை சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் மன அழுத்தம் குறைவதும், ரம்மியமான சூழல் மனதில் ஏற்படுவதும் இயற்கை.
மீன்களுக்கு உணவிடும் முறை, தண்ணீர் மாற்றுதல், ஆண், பெண் மீன்களை அடையாளம் காணுதல். முட்டையிடும் மீன் வகைகளில் அம்முட்டைகளை தனியாக பிரித்தெடுத்தல் ஆகியவற்றை தெரிந்துகொள்ளுதல் மீன் வளர்ப்பு அடிப்படை அம்சம் ஆகும்.
மீன் தொட்டிகளை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். இரும்புக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சிலிக்கான் பேஸ்ட் மூலம் கண்ணாடிகளை ஒட்டி தொட்டியாக உருவாக்கலாம்.
மீன் தொட்டிகளால் சுகாதாரச் சிர்கேடு, கொசு பரவுவதாக சிலர் புகார் தெரிவிப்பதுண்டு. அது தவறு. மீன்களின் முக்கிய உணவு கொசுவின் லார்வா. எனவே இயற்கையாகவே கொசுக்களின் உற்பத்தியை இவை தடை செய்யக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீரை நீண்ட நாள் மாற்றாமல் உணவு பொருள் கசடுகளால் மாசு ஏற்படும் நிலையிலே மீன் தொட்டிகளில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இறந்துவிடும் மீன்களை உடனடியாக அகற்றுவது அவசியம்.
பெரிய அளவில் மீன்கள் வளர்க்கப்படும் போது அவற்றுக்கு சில நோய்கள் வருவதுண்டு. அவற்றுக்கான தடுப்பு மருந்துகளும் தற்போது உள்ளன.
மீன் பராமரிப்பவர்களுக்கு தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் இல்லை.
வண்ண மீன்களை அதிக அளவில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மரைன் புராடக்ட் எக்ஸ்போர்ட் டிவிஷன் வழிகாட்டுகிறது.
ன்றி கூடல் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...