முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 12


முதற்படி முதலில் படி! - 12


ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
சென்ற இதழில் வேல்யூ இன்வெஸ்ட்டிங் யுக்தி பற்றி விளக்கமாகப் பார்த்தோம்... இம்முறை குரோத் இன்வெஸ்டிட்ங் யுக்தி பற்றி விளக்கமாகப் பார்ப்போம். ஆங்கிலத்தில் குரோத் என்றால் வளர்ச்சி. வளர்ச்சியை விரும்பாதவர் உலகில் யாராவது இருப்பார்களா? ஆனால் வளர்ச்சி இருக்கும் இடத்தில்தான் அதிக ரிஸ்க்கும் இருக்கும் என்பதை நாம் மறக்கக்கூடாது.
நீங்கள் உங்கள் பெண்ணுக்கு ஒரு நல்ல வரனைத் தேடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாப்பிள்ளையின் குடும்ப நிதி நிலைமை சுமாராக உள்ளது. ஆனால் அந்த மாப்பிள்ளையோ ஒரு நல்ல துடிப்புள்ள இளைஞனாக இருக்கிறார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. தன் சொந்தக்காலில் நிற்க ஆசைப்படுகிறார். எல்லா அறிகுறிகளையும் பார்க்கும்போது, அந்த இளைஞர் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களது பெண்ணிற்கும் அவரைப் பிடித்துப் போய்விட்டது. திருமணம் முடிகிறது. நம்பிக்கை பொய்க்காமல் வெற்றிகரமான தம்பதிகளாக வாழ்ந்து காட்டுகிறார்கள் அவர்கள். இதுபோல் எத்தனையோ கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் வளர்ச்சிப் பங்கு களுக்கு உதாரணங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இன்ஃபோசிஸ், விப்ரோ, சிப்லா, பி.ஹெச்.இ.எல், எல் அண்ட் டி என பல நிறுவனங்களைச் சொல்லலாம். இன்றும் இந்தியப் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருவதால், இன்று ஓரளவுக்கு சிறிதாக இருக்கும் நிறுவனங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சிப் பங்குகளாக மாறி, பெரும் நிறுவனங்களாக வளர்ந்தி ருக்கும். ஒரு புதிய முதலீட்டாளர் ஒவ்வொரு சிறிய நிறுவனப் பங்கைப் பார்க்கும் போதும், இந்த நிறுவனம் நாளைக்கு இன்ஃபோசிஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனமாக வளர்ந்துவிடும் என்று நினைத்துவிடுவார். எல்லா நிறுவனங்களும் இன்ஃபோசிஸ் போல் வளர்ந்துவிடாது. ஆகவே குரோத் நிறுவனப் பங்குகளைப் பொறுக்குவதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
அதிவேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு திடீரென்று எதிர்பாராத பிரச்னைகளும் வரும். அப்படி வரும்போது அதைச் சமாளித்து அதிலிருந்து மீண்டு வரக்கூடிய நிர்வாகத் திறன் கொண்ட நிறுவனமாக அது இருக்க வேண்டும். வேல்யூ நிறுவனங்களைவிட குரோத் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் ரிஸ்க் அதிகம்; ரிவார்டும் அதிகம்!
சரி, குரோத் நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுக்கும் விதம் என்ன? கீழ்கண்ட சில வரைமுறைகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் எவை குரோத் பங்குகள் என்பது உங்களுக்குத் தெளிவாகவே புரியும்.
1.
கடந்த 5/ 10/ 15 வருடங்களில் டேர்ன் ஓவர், நிகர லாபம், இ.பி.எஸ். போன்ற அளவுகோல்களில் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும் ( உதாரணத்துக்கு 20%-க்கு மேல்!). அதன் துறை சார்ந்த நிறுவனங்களைவிட அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும் (குறைந்தது 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக)
2.
கடந்த காலத்தில் மட்டுமல்ல, அடுத்த 5/ 10/ 15 வருடங்களில் அந்நிறுவனத்தின் டேர்ன் ஓவர், நிகர லாபம், இ.பி.எஸ். போன்றவற்றின் வளர்ச்சியும் அதிகமாவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அந்நிறுவனம் சார்ந்த துறைக்கு வளர்ச்சி வாய்ப்பு, போட்டிகள் மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவை உள்ளனவா என்று அனலைஸ் செய்ய வேண்டும்.
3.
செலவுகள் கட்டுக்குள் உள்ளனவா/ இனி வரும் காலங்களிலும் அது கட்டுக்குள் இருக்குமா என்று பார்க்க வேண்டும்.
4.
திறமையான நிர்வாகத்தைக் கொண்டுள்ளதா, குறுக்கு வழியில் செல்லாத புரமோட்டர்களைக் கொண்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்
5.
அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பங்கின் விலை இரட்டிப்பு ஆகுமா என்பதையும் அலச வேண்டும்.
6.
ஆர்.ஓ.இ. (ROE – Return On Equity) வளர்ந்து கொண்டே இருக்கிறதா? (ஆர்.ஓ.இ = நிகர லாபம்/ பங்குதாரர்களின் முதலீடு)
சரி, குரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன?
இவைகள் வேல்யூ பங்குகளுக்கு நேர் எதிர்மாறாக இருக்கும். உதாரணத்துக்கு, அதிக பி/இ,
பி/பிவி கொண்டவையாக இருக்கும். வரும் லாபம் அனைத்தையும் இந்நிறுவனங்கள் திரும்ப தனது தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்து விடுவதால், டிவிடெண்ட் பெரும் பாலும் மிகமிகக் குறைவாக இருக்கும். இந்நிறுவனங்கள் ஐ.டி., பயோடெக்னாலஜி போன்ற புதிய பொருளாதாரத்தைச் சார்ந்த நிறுவனங்களாக இருக்கும் அல்லது, அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில்/நாடுகளில்/துறைகளில் இடம் பெற்றிருக்கும். அந்நிறுவனங்களின் அதீத வளர்ச் சியால், நிகர லாபம் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதனால் அதன் பங்கு விலையும் உயர்ந்து கொண்டே செல்லும். இது போன்ற நிறுவனங் களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பாலும் முதலீட்டைப் பெருக்கும் (Capital Appreciation) நோக்கத்துடனேயே முதலீடு செய்வர்.
தாமஸ் ரோவ் பிரைஸ் ஜூனியர் (Thomas Rowe Price Jr.) என்பவரை குரோத் இன் வெஸ்ட்டிங் யுக்தியின் குரு என்று கூறலாம். 1937-ல் டி. ரோவ் பிரைஸ் அசோஸியேட்ஸ் என்ற பெயரில் தனது நிறுவனத்தை ஆரம்பித்தார். இவர் வாங்கிய பங்குகளை 'ரோவ் பிரைஸ் பங்குகள்என்று சந்தை கூறிய காலம் உண்டு. திறமையான நிர்வாகம் கொண்ட, வளமான துறைகளில் உள்ள, அதிக டிவிடெண்ட் மற்றும் வருமானம் கொடுக்கக்கூடிய, பணவீக்கத்தைவிட,  நாட்டின் பொருளாதாரத்தைவிட அதிக மான வளர்ச்சியைக் காணக்கூடிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தார்.
மேலும், வளர்ச்சியுள்ள நிறுவனங்களை அவர் தேடிய போது சில குணாதிசயங்களைக் கண்டறிந்தார். சிறந்த ஆராய்ச்சி வசதி, குறைந்த போட்டி, மிகக் குறைந்த அரசாங்க கட்டுப்பாடு, குறைந்த மொத்த ஊழியர் சம்பளம் (அதே சமயத்தில் நல்ல சம்பளம் பெறக்கூடிய ஊழியர்கள்), குறைந்தது 10 சதவிகிதம் போட்ட முதலுக்கு வருமானம், உயர்ந்த லாப விகிதம், அதிக இ.பி.எஸ். வளர்ச்சி போன்றவை ஆகும்.
வாரன் பஃபட் போன்றோர் வேல்யூ மற்றும் குரோத் இன்வெஸ்ட்டிங் ஆகிய இரண்டுக் கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறுகின்றனர். அவரைப் பொறுத்தவரை 'வேல்யூ ஒரு கால் என்றால் குரோத் இன்வெஸ்ட்டிங் இன்னொரு கால். இந்த இரண்டு கால்களும் இடுப்பில்தான் சேர்கின்றன'  என்கிறார்.
பீட்டர் லிஞ்ச் (Peter Lynch) என்பவர் மற்றுமொரு பிரசித்தி பெற்ற அமெரிக்க முதலீட்டாளர். இவர் ஃபிடலிட்டி இன்வெஸ்ட் மென்ட்ஸில் வெற்றிகரமான ஃபண்ட் மேனேஜராக நீண்ட நாட்கள் இருந்தார். இவர் எழுதிய பல புத்தகங்கள் (One Up On Wall Street, Beating the Street, and Learn to Earn) மிகவும் பிரசித்தம். இவர் வேல்யூ மற்றும் குரோத் ஆகிய இரு இன்வெஸ்ட்மென்ட் யுக்திகளையும் சேர்த்து 'கார்ப்’ (GARP – Growth At Reasonable Price) என்ற யுக்தியைப் பாப்புலராக்கினார்.
இவ்வகையான முதலீட்டா ளர்கள் சந்தையைவிட அதிக வளர்ச்சியுள்ள (குரோத் இன் வெஸ்ட்டிங்) அதே சமயம் குறைவான மதிப்புடைய (வேல்யூ இன்வெஸ்ட்டிங்) பங்குகளை நாடிச் செல்வர். இவ்வாறு தேடும்போது இரு வகையான முத லீட்டின் கோடிக்குச் செல்லாமல், குரோத் உள்ள அதே சமயம் குறைந்த பி/இ உள்ள பங்குகளை நாடிச் செல்வர்.
இவ்வகையான முதலீட்டை தேடுவதற்கு பல வகையான அளவு கோல்கள் இருந்த போதிலும், 'பெக்’[PEG – Price/ Earings to (EPS) Growth] விகிதம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒன்றுக்கு குறைவாக இருந்தால் நல்ல முதலீடு என்று கருதப் படுகிறது. உதாரணத்துக்கு நீங்கள் தேர்வு செய்த பங்கின் பி/இ ஐந்து என வைத்துக் கொள்வோம். அந்நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டு கால இ.பி.எஸ். வளர்ச்சி ஆண்டுக்கு 10% எனக் கொண்டால், அதன் 'பெக்விகிதம் (5/10 = 0.5) 0.5 ஆகும். இந்த உதாரணத் தில் 'பெக்விகிதம் ஒன்றிற்கு குறைவாக இருப்பதால், இதை ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாகக் கருதலாம்.
அடுத்து வாரத்தில் கான்ட்ரா மற்றும் பேஸிவ் இன்வெஸ்ட்டிங் முதலீட்டு முறை பற்றிக் காண்போம்.
(படி ஏறுவோம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...