முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 30


முதற்படி முதலில் படி! - 30

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..


கடந்த சில வாரங்களாக ஃப்ரீ கேஷ் ஃப்ளோ கண்டுபிடிப்பதற்குத் தேவையான அனைத்து அளவுகோல் களையும் விரிவாகப் பார்த்தோம்...  அவற்றைக் கொண்டு கணக்கிட்ட ஃப்ரீ கேஷ் ஃப்ளோ அட்டவணை 1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள அட்டவணையில் ஆபரேட்டிங் பிராஃபிட்டிலிருந்து, அதாவது செயல்பாட்டு லாபத்திலிருந்து வருமான வரி, நிகர முதலீடு மற்றும் ஒர்க்கிங் கேபிட்டலில் உள்ள மாற்றம் போன்றவற்றைக் கழித்துள்ளோம். அவ்வாறு கழித்தபிறகு கடைசியாகக் கிடைப்பதுதான் நிறுவனத்திற்கு கிடைக்கும் ஃப்ரீ கேஷ் ஃப்ளோ. நிறுவனத்தின் மதிப்பைக் கண்டுபிடிக்க இன்னும் இரண்டு 'ஸ்டெப்தூரத்தில் உள்ளோம்.
ஒன்று, நாம் முதலில் கூறியதுபோல டிஸ்கவுன்ட் ரேட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். மற்றொன்று, நிறுவனத்திற்கு டெர்மினல் வேல்யூ (Terminal Value) கண்டுபிடிக்க வேண்டும். முதலில் டிஸ்கவுன்ட் ரேட்டை கண்டுபிடித்து விடுவோம். ஏனென்றால், அதை உபயோ கித்துத்தான் டெர்மினல் வேல்யூவைக் கண்டுபிடிக்க வேண்டும். டிஸ்கவுன்ட் ரேட்டை எவ்வாறு கணக்கிடுவது என்பதற்கு முன்பாக, அதைப் பற்றி பார்த்து விடுவோம்.
டிஸ்கவுன்ட் ரேட் என்பது எந்த ஒரு முதலீட்டிலும் நீங்கள் எதிர்பார்க்கும் வருமான சதவிகிதம். உதாரணமாக, உங்களிடம் 1 கோடி ரூபாய் உள்ளது. உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் கிடைக்கிறது.
1.
இந்திய அரசாங்க கடன் பத்திரத்தில் (பாண்ட்) முதலீடு செய்தால் உங்களுக்கு உறுதியாக எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் ஆண்டிற்கு 8% வருமானம் கிடைக்கிறது. நமது அரசாங்கம் திவாலாகாது என்பதால், அது கொடுக்கும் ரேட்தான் ரிஸ்க் ஃப்ரீ ரேட்.


2. ஒரு நிறுவனம் விலைக்கு வருகிறது. ரிஸ்க் எடுத்து, அந்த நிறுவனத்தை வாங்கினால், எல்லாச் செலவுகளும் போக ஆண்டுக்கு 6% வருமானம் கிடைக்கிறது. புத்திசாலியாகிய நீங்கள் எந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பீர்கள்? நிச்சயமாக முதல் ஆப்ஷனைத்தான்.
இப்போது இன்னுமொரு கம்பெனி (உதாரணமாக, ஏபிசி லிமிடெட்) விலைக்கு வருகிறது - அதே ஒரு கோடி ரூபாய்க்கு? ரிஸ்க் எடுத்து அதை வாங்கினால், எல்லாச் செலவுகளும் போக உங்களுக்கு ஆண்டிற்கு 16% வருமானம் கிடைக்கும். ரிஸ்க்கிற்கு ஏற்ற ரிவார்ட் நன்றாக உள்ளது என்று நினைக்கிறீர்கள். எனவே,  அரசு கடன் பத்திரத்தில் முதலீடு செய்யாமல், எபிசி லிமிடெட்டை விலைக்கு வாங்க முடிவு செய்கிறீர்கள். ஆகவே, ரிஸ்க்குடன் கூடிய லாபமாகிய 16%-தான் உங்களின் டிஸ்கவுன்ட் ரேட். உங்களின் நண்பருக்கு 14% வருமானம் போதும் என்று நினைத்தால் அது அவருடைய டிஸ்கவுன்ட் ரேட்.
இந்த டிஸ்கவுன்ட் ரேட்டை எவ்வாறு கணக்கிடுவது? என்பதை தெரிந்து கொள்ளும் முன், நாம் உருவாக்கிக் கொள்ளும் சில அனுமானங்களைப் பொறுத்தே டிஸ்கவுன்ட் ரேட் அமையும் என்பது முக்கியமான விஷயம். சுருக்கமாகச் சொன்னால், இந்த டிஸ்கவுன்ட் ரேட் நாட்டைப் பொறுத்து, நிறுவனத்தைப் பொறுத்து, செய்யப் போகும் தொழிலின் ரிஸ்க்கைப் பொறுத்து அமையும்.
டிஸ்கவுன்ட் ரேட்டை வேக் (WACC – Weighted Average Cost of Capital) முறையைக் கொண்டு கணக்கிடலாம். பொதுவாக, பணம் ஒரு நிறுவனத்திற்கு ஈக்விட்டி முதலீடாகவும், கடனாகவும் கிடைக்கும். இந்த இரண்டு வகையான நிதி திரட்டுதலின் சதவிகிதத்தை (வெயிட்டை) எடுத்துக் கொண்டு அவற்றின் விலையால் (equity cost and interest cost) பெருக்கி, பிறகு கூட்டினால் கிடைப்பதுதான் டிஸ்கவுன்ட் ரேட். கடனுக்குக் கொடுக்கும் வட்டியிலிருந்து, வரியை கழித்துக் கொள்ள வேண்டும். ஏன் என்பதை கீழே விரிவாகக் காண்போம்.
வாங்கும் கடனுக்கு நிறுவனங்கள் வட்டி கொடுக்கும். அந்த வட்டியை நிறுவனங்கள் இன்கம் ஸ்டேட்மென்டில் செலவாக எழுதுகின்றன. அதனால், அந்த அளவிற்கு வருமான வரியை நிறுவனங்கள் குறைத்துச் செலுத்துகின்றன. இதனால், நிறுவனங்களுக்கு எஃபெக்டிவ் வட்டிச் செலவு (effective interest cost), வரி செலுத்தும் அளவிற்குக் குறையும்.
உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் 1,00,000 ரூபாயை 2010-11-ம் ஆண்டில் வட்டி யாகக் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அதே நிறுவனம் கடன் வாங்காமல் இருந்தால், வருமான வரியை அதிகமாகச் செலுத்தி யிருக்கும். கீழே உள்ள அட்டவணையில் கடன் வாங்கியுள்ள நிறுவனம் 33,990 ரூபாய் குறைவாக வருமான வரி கொடுத்துள்ளதைக் காணலாம். அது கடன் வாங்கியதால் கிடைத்த லாபம். ஆகவேதான் நாம் டிஸ்கவுன்ட் ரேட் கணக்கு செய்யும்போது கடன் வாங்கிய பகுதிக்கு, வருமான வரியைக் கழித்துக் கொள்கிறோம்.
டிஸ்கவுன்ட் ரேட்டைக் கண்டுபிடிக்கும் முன், அதில் பயன்படுத்தப்படும் சில முக்கிய வார்த்தைகளை பார்ப்போம்.
ரிஸ்க் ஃப்ரீ ரேட் (Risk Free Rate): எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்காமல் கிடைக்கக்கூடிய ரிட்டர்ன் இது. RF என  அழைக்கப்படும் இது இந்திய அரசாங்கத்தின் 10 வருட கடன் பத்திரத்தின் (10 Year Govt. of India Securities) தற்போதைய வருமானம் (யீல்ட்) ரிஸ்க் ஃப்ரீ ரேட்டாக எடுத்துக் கொள்ளலாம். இது தற்போது 8.30% ஆகும்.
பீட்டா (Beta): பீட்டா என்பது ஏற்ற இறக்கத்தைக் காட்டும் அளவுகோல். ஒரு பங்கின் பீட்டா, ஒன்றிற்குமேல் இருந்தால் மார்க்கெட் ரிஸ்க்கை விட அதிக ரிஸ்க் உடைய பங்கு என்று அர்த்தம். பீட்டா ஒன்றிற்குக் கீழே இருந்தால் மார்க்கெட் ரிஸ்க்கைவிட குறைவு என்று அர்த்தம். நெகட்டிவ்வாக இருந்தால் ரிவர்ஸ் கோரிலேஷன் (reverse corelation) என்று அர்த்தம். அதாவது, மார்க்கெட் குறைந்தால், இதன் விலை ஏறும். மார்க்கெட் ஏறினால் இதன் விலை குறையும். தங்கம் போன்ற முதலீடுகள் இவ்வாறு ரிவர்ஸாக செயல்படும்.
பங்கு முதலீட்டின் விலை (Cost of Equity): பங்கு முதலீட்டாளர்கள் நிறுவனத் திடம் இருந்து எதிர்பார்க்கும் ரிட்டர்ன்தான் காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி. பொதுவாக இது டிவிடென்ட் மற்றும் கேபிட்டல் அப்ரிசியேஷன் மூலமாக இருக்கும்.
ஈக்விட்டி ரிஸ்க் பிரீமியம் (Equity Risk Premium): பங்கு (ஈக்விட்டி) முதலீடு ரிஸ்க் நிறைந்தது என்பதால், ரிஸ்க் ஃப்ரீ ரேட்டைவிட அதிகமாக முதலீட்டாளர்கள் கேட்கும் ரேட்தான் ஈக்விட்டி ரிஸ்க் பிரீமியம் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, தற்போதைய ரிஸ்க் ஃப்ரீ ரேட் 8.30%. ஈக்விட்டி முதலீட்டாளர்கள் 15.30% எதிர்பார்த்தால், ரிஸ்க் பிரீமியம் 7% ஆகும்.
சி.ஏ.பி.எம் (CAPM – Capital Asset Pricing Model): காஸ்ட் ஆஃப் ஈக்விட்டியைக் கணக்கிட உதவும் ஃபார்முலா. இந்த ஃபார்முலாவைக் கண்டுபிடித்ததற்காக வில்லியம் ஷார்ப்பி என்பவருக்கு 1990-ல் நோபல் பரிசு கிடைத்தது.
அடுத்த வாரத்தில் காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி கண்டுபிடித்து, வேக் உபயோகித்து டிஸ்கவுன்ட் ரேட் கண்டுபிடித்து, டெர்மினல் வேல்யூ கண்டுபிடிப்பதைப் பார்ப்போம்.
(படி ஏறுவோம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...