முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 21


முதற்படி முதலில் படி! - 21


டிவிடெண்ட் யீல்டு
கடந்த இரண்டு வாரங்களாக குவான்டிடேட்டிவ் அனாலிசிஸில் முக்கியமான விஷயங்கள் சிலவற்றைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் மேலும் சில முக்கியமான  அளவுகோல்கள் குறித்துப் பார்ப்போம்...
டிவிடெண்ட் யீல்ட்: எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து கொஞ்சமாவது கேஷ் ஃப்ளோவை கொடுத்து வரவேண்டும். நீங்கள் எக்ஸ்ட்ராவாக ஒரு வீடு வைத்துள்ளீர்கள் - அதிலிருந்து மாதாமாதம் வாடகை வந்து கொண்டிருந்தால் உங்களுக்கு சந்தோஷம்தானே? அதைப் போலவே பங்கு முதலீட்டிலிருந்து வருவது டிவிடெண்ட் ஆகும். நாம் நீண்ட நாட்களுக்கு ஒரு நிறுவனப் பங்கில் முதலீட்டாளராக இருக்கும்போது, நமக்கு
டிவிடெண்ட் ஒன்றுதான் கேஷ் ஃப்ளோவாகக் கிடைக்கக்கூடியது. டிவிடெண்ட் என்பது நிறுவனம் தனது லாபத்தில் ஒரு பகுதியை பங்குதாரர் களுக்கு பிரித்துக் கொடுப்பது. இதை கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாமா?

ஒவ்வொரு பங்கிற்கும் முகமதிப்பு என்று ஒன்று இருக்கிறது. நம் நாட்டில் இந்த முகமதிப்பின் அடிப்படையில் டிவிடெண்டை அறிவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட இந்தியன் வங்கி, மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டில் 25% டிவிடெண்ட் ஒருமுறையும், 40% டிவிடெண்ட் மற்றொருமுறையும், ஆக மொத்தம் 65% (6.50) டிவிடெண்ட் அந்த ஆண்டு கொடுத்தது.
இந்த டிவிடெண்ட் சதவிகிதத்தை முகமதிப்பை அடிப்படையாக வைத்து சொல்கிறார்கள். ஆனால், தற்போதைய விலையின் மீது வைத்து இதன் வருமானத்தைப் பார்ப்பது அல்லது நீங்கள் வாங்கிய விலையை வைத்து இதன் வருமானத்தைப் பார்ப்பதுதான் சரியானது. அதைத்தான் டிவிடெண்ட் யீல்ட் என்று கூறுகிறோம். உதாரணமாக, இந்தியன் வங்கியையே எடுத்துக் கொள்வோமே!
இந்த பங்கின் தற்போதைய விலையை வைத்துப் பார்த்தால், இந்தியன் வங்கியின் மார்ச் 2010-ம் ஆண்டின் டிவிடெண்ட் யீல்ட் 2.78% (6.50/234) ஆகும். இந்தியன் வங்கி தனது பங்கை முதன் முதலில் 2007-ம் ஆண்டு மக்களுக்கு விற்றபோது நீங்கள் அப்பங்கை 91 ரூபாயில் வாங்கியிருந்தால், உங்களின் யீல்ட் 7.14% (6.50/91) ஆகும். நீங்கள் பங்குகளை வாங்கப் போகுமுன் பார்க்க வேண்டிய அளவுகோல்களில் டிவிடெண்ட் யீல்ட் ஒரு முக்கியமான அளவுகோல் ஆகும். அது அதிகமாக இருப்பது நல்லது. சில சமயங்களில் பங்கு விலை, நிறுவனத்தில் இருக்கும் பெரிய பிரச்னையால், திடீரென்று சரிந்திருக்கும். அதுபோன்ற சமயங்களில் டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக தென்படும். ஆகவே, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
இந்தியப் பொருளாதாரமும், நிறுவனங்களும் இன்று வளர்ச்சிப் பாதையில் இருப்பதால், டிவிடெண்ட் யீல்ட் பொதுவாகவே குறைவாக உள்ளது. காரணம், நிறுவனங்கள் தங்களது லாபத்தை தொழில்களிலேயே திருப்பி முதலீடு செய்துவிடுவது தான். நமது நிஃப்டி குறியீட்டின் டிவிடெண்ட் யீல்ட் வெறும் 1.07 சதவிகிதம்தான். வங்கி போன்ற சில துறை சார்ந்த பங்குகளின் டிவிடெண்ட் யீல்ட் சற்று அதிகமாக இருக்கும். பொதுவாக நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் டிவிடெண்ட் யீல்ட் பெரிய நிறுவனங்களைவிட அதிகமாக இருக்கும். ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்புகிறவர்கள் டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக உள்ள பங்குகளில் முதலீடு செய்யலாம். பொதுவாக பழைய பொருளாதார நிறுவனங்களின் (புதிய பொருளாதார நிறுவனங்களைவிட) டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக இருக்கும்.
உச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை
பொதுவாக பங்குகளை வாங்க பல அளவுகோல்களை அலசும்போது அப்பங்கின் அதுவரையிலான உச்சபட்ச விலை/குறைந்தபட்ச விலை மற்றும் 52 வார அதிகம்/குறைவு  போன்றவற்றையும் பாருங்கள். இது பங்கு காளையின் பிடியில் உள்ளதா அல்லது கரடியின் பிடியில் உள்ளதா என்பதைக் காண்பிக்கும். பங்குகள் தங்களது உச்சபட்ச விலையை ஒட்டி வர்த்தகம் ஆகும்போது வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதேசமயம் பங்குகள் கரடியின் பிடியில் இருக்கும்போது வாங்குவது நல்லது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு சில ஆண்டுகள் நிகழ்ந்ததைப் போல ஏதேனும் பெரிய பிரச்னைகள் ஒரு நிறுவனத்திற்கு நிகழலாம். அதுபோன்ற சமயங்களில் எச்சரிக்கை தேவை. சந்தை மொத்தமாக அடிபட்டிருக்கும் போது அல்லது சில துறைகள் அடிபட்டிருக்கும்போது பங்குகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க வாய்ப்புண்டு. அதுபோன்ற சமயங்களில் மற்ற அளவுகோல்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஷேர்ஹோல்டிங்
நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் பங்குகளை வேறு யார் யார் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். நன்றாக செயல்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் துறையின் பெரிய நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஐ.எஃப்.சி (இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்) போன்ற நிறுவனங்கள் ஷேர்ஹோல்டராக இருப்பது பாஸிட்டிவ்-ஆன விஷயம். அதை நீங்கள் ஒரு ஃபில்ட்டராக வைத்துக் கொள்ளலாம். ஓரளவு ஆராயாமல் அவர்கள் அந்நிறுவனப் பங்குகளை வாங்கியிருக்க மாட்டார்கள். எஃப்.ஐ.ஐ. என்று கூறப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஷேர்ஹோல் டர்களாக இருப்பது ஒரு வகையில் நன்மை - பங்கின் விலை உயரும்; மற்றொரு வகையில் தீமை - வெளிநாடுகளில் அவர்களுக்கு போட்ட பணம் தேவைப்பட்டால் இங்கிருந்து உடன் எடுத்துச் செல்லும்போது, அப்பங்கின் விலை சடாரென்று குறைய வாய்ப்புண்டு. ஆகவே, சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பெரிய நிறுவனப் பங்குகளைப் பொறுத்தவரை, இது ஒன்றும் பிரச்னை இல்லை. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகள் அவ்வாறு அடிபட்டால் எழுந்து வர நாளாகும்.
மொத்தக் கடன்
பல நிறுவனங்கள் மூலைக்கு தள்ளப்படுவதற்குக் காரணம் சக்திக்கு மீறிய கடன். கடன் என்பது இருதலைக் கொள்ளி போன்றது. சமயம் சரியாக இருந்தால் ஒரு நிறுவனத்தை அளவிற்கு அதிகமாகத் தூக்கிவிடும். கஷ்டம் என்று வருகையில் அதலபாதாளத் திற்கு தள்ளிவிடும். இதுபோல், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல நிறுவனங்கள் பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கின்றன. கடனே இல்லாமல் செயல்படும் நிறுவனங் கள் மிக மிகச் சிறந்தவை. சில நேரங்களில் நிறுவனத்துக்கு ஓரளவு கடன் இருந்தால், மேனேஜ்மென்ட் சற்று துரிதமாக வேலை பார்க்கும். மேலும், நிறுவனத்தில் சற்று வேகம் இருக்கும். அதுபோக, பங்கின் மீதான வருமானம் சற்று அதிகமாக இருக்கும். நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் மொத்தக் கடன் எவ்வளவு என்று பாருங்கள். பங்கு முதலைப் போல் எத்தனை மடங்குக்கு கடன் வாங்கியுள்ளது என்பதைக் கவனியுங்கள். இது ஒவ்வொரு துறைக்கும் சற்று மாறுபடும். வங்கிகள் கடன் (டெபாசிட்) வாங்காமல் தொழில் செய்ய முடியாது. அதுபோல் சர்வீஸ் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் தேவைப்படாது. நீங்கள் வாங்கப்போகும் பங்கை அத் துறையில் உள்ள சிறந்த நிறுவனப் பங்குடன் ஒப்பிடுங்கள். அப்போது உங்களுக்குத் தெளிவு பிறக்கும்.
(படி ஏறுவோம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...