முதற்படி முதலில் படி! - 33
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும்
புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

பொதுவாக வியூகம் என்பது எப்போது தேவை? போர்க்களத்தில்தான். போரில் எப்படி ஜெயிப்பது என்று வரும்போது நமக்கு ஒரு செயல்திட்டம்
வேண்டும். இந்த செயல்திட்டத்தை நிறைவேற்ற வழி அமைத்துக் கொடுப்பதுதான் வியூகம்.
பங்குச் சந்தை என்பது ஒரு போர்க்களம் என்று சொல்கிற அளவுக்கு பயங்கரமான
விஷயமில்லை என்றாலும், நீங்கள் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர் ஆவதற்கு சரியான வியூகம்
தேவை. பங்குச் சந்தை முதலீட்டில் பலரும் பலவிதமான வியூகங்களைப்
பயன்படுத்துவார்கள். மிகக் குறுகிய காலம், குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என
முதலீட்டாளரின் கால அளவைப் பொறுத்து வியூகம் மாறுபடும். நாம் இங்கு பார்க்கப் போவது
நீண்டகால (ஐந்து வருடத்திற்குமேல்) முதலீட்டாளர்களுக்கான வியூகத்தைப் பற்றித்தான்.
இத்தொடரில் சில மாதங்களுக்கு முன்பு வெவ்வேறு முதலீட்டு யுக்திகள் பற்றி குறிப்பாக குரோத் இன்வெஸ்ட்டிங், வேல்யூ இன்வெஸ்ட்டிங், கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் மற்றும் பேஸிவ் இன்வெஸ்ட்டிங் குறித்துப் பார்த்தோம். இவற்றிற்கும் மேலாக பொதுவான வியூகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
வியூகம் 1
அன்றாட வாழ்விற்கு மற்றும் குறுகிய காலத்திலேயே தேவைப்படக்கூடிய பணத்தை பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள்.
வியூகம் 2
போர்ட்ஃபோலியோ அலோகேஷன் என்பது மிக முக்கியமான ஒன்று. உங்களது போர்ட்ஃபோலியோவில் அவசரத் தேவைக்கான லிக்விட் பணம், நிரந்தர வைப்புநிதி திட்டங்கள், அரசாங்க பாண்டுகள், நிலம், தங்கம், பங்குகள் என அனைத்தும் வயதிற்கேற்ப/தேவைகளுக்கு ஏற்ப இருக்கட்டும்.
வியூகம் 3
போர்ட்ஃபோலியோ பேலன்ஸிங் என்பது முக்கியமான ஒன்று. உங்கள் வயதிற்கேற்ப, ரிஸ்க் எடுக்கும் திறனிற்கேற்ப, உங்கள் செல்வத்தின் மதிப்பிற்கு ஏற்ப உங்களது போர்ட் ஃபோலியோவை வருடத்திற்கு ஒரு முறையாவது பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள்.
வியூகம் 4
நீங்கள் பங்குச் சந்தைக்கு புதியவராக இருக்கும் பட்சத்தில், பெரிய நிறுவனப் பங்குகளில் அல்லது உங்களுக்கு மிகவும் பரிச்சயமான நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். நிறுவனங்கள் பற்றிய பரிச்சயம் இல்லாதவர்கள் இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யலாம்.
வியூகம் 5
நீங்கள் விரும்பிய பங்குகளை விரும்பிய விலையிலேயே வாங்குங்கள். விரட்டிச் சென்று வாங்காதீர்கள்.
இத்தொடரில் சில மாதங்களுக்கு முன்பு வெவ்வேறு முதலீட்டு யுக்திகள் பற்றி குறிப்பாக குரோத் இன்வெஸ்ட்டிங், வேல்யூ இன்வெஸ்ட்டிங், கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் மற்றும் பேஸிவ் இன்வெஸ்ட்டிங் குறித்துப் பார்த்தோம். இவற்றிற்கும் மேலாக பொதுவான வியூகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
வியூகம் 1
அன்றாட வாழ்விற்கு மற்றும் குறுகிய காலத்திலேயே தேவைப்படக்கூடிய பணத்தை பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள்.
வியூகம் 2
போர்ட்ஃபோலியோ அலோகேஷன் என்பது மிக முக்கியமான ஒன்று. உங்களது போர்ட்ஃபோலியோவில் அவசரத் தேவைக்கான லிக்விட் பணம், நிரந்தர வைப்புநிதி திட்டங்கள், அரசாங்க பாண்டுகள், நிலம், தங்கம், பங்குகள் என அனைத்தும் வயதிற்கேற்ப/தேவைகளுக்கு ஏற்ப இருக்கட்டும்.
வியூகம் 3
போர்ட்ஃபோலியோ பேலன்ஸிங் என்பது முக்கியமான ஒன்று. உங்கள் வயதிற்கேற்ப, ரிஸ்க் எடுக்கும் திறனிற்கேற்ப, உங்கள் செல்வத்தின் மதிப்பிற்கு ஏற்ப உங்களது போர்ட் ஃபோலியோவை வருடத்திற்கு ஒரு முறையாவது பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள்.
வியூகம் 4
நீங்கள் பங்குச் சந்தைக்கு புதியவராக இருக்கும் பட்சத்தில், பெரிய நிறுவனப் பங்குகளில் அல்லது உங்களுக்கு மிகவும் பரிச்சயமான நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். நிறுவனங்கள் பற்றிய பரிச்சயம் இல்லாதவர்கள் இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யலாம்.
வியூகம் 5
நீங்கள் விரும்பிய பங்குகளை விரும்பிய விலையிலேயே வாங்குங்கள். விரட்டிச் சென்று வாங்காதீர்கள்.

வியூகம் 6
பங்கின் உண்மையான மதிப்பைவிட விலை குறைவாகக் கிடைக்கும்போது மட்டுமே வாங்குங்கள். அதேபோல் பங்கின் விலை உச்சத்தைத் தொட்டு, எந்தவிதமான வேல்யூவேஷன் வரம்புக்குள்ளும் வராமல் இருக்கும்போது துணிந்து விற்றுவிடுங்கள்.
வியூகம் 7
தரம், நிரந்தரம்! எப்போதும் தரமான நிறுவனப் பங்குகளையே வாங்குங்கள். கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்று சொன்னாலும் தரமற்ற நிறுவனப் பங்குகளை வாங்காதீர்கள்!
வியூகம் 8
பொறுமை கடலினும் பெரிது! தரமான பங்குகளை வாங்கிய பிறகு பொறுமையாகக் காத்திருங்கள்! (நினைவில் கொள்க: பங்கு முதலீடு என்பது சுவாரஸியமற்ற (தீஷீக்ஷீவீஸீரீ) விஷயம்.) குழந்தை பிறந்து, வளர்ந்து, படித்து சம்பாதிப்பதற்குக்கூட 21 வருடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. அவ்வாறு இருக்கும்போது குறைந்தது ஒரு ஐந்து வருடமாவது நாம் வாங்கிய பங்கினை வளர்வதற்கு அனுமதிக்க வேண்டாமா?
வியூகம் 9
நம்பினோர் கைவிடப் படார்! நீங்கள் அலசி ஆராய்ந்து வாங்கிய தரமான பங்குகள் ஒருபோதும் வீண் போகாது! நம்பிக்கையுடன் காத்திருங்கள். திடமான நம்பிக்கை இல்லாமல் (நீஷீஸீஸ்வீநீtவீஷீஸீ) பங்குகளை வாங்காதீர்கள்!
பங்கின் உண்மையான மதிப்பைவிட விலை குறைவாகக் கிடைக்கும்போது மட்டுமே வாங்குங்கள். அதேபோல் பங்கின் விலை உச்சத்தைத் தொட்டு, எந்தவிதமான வேல்யூவேஷன் வரம்புக்குள்ளும் வராமல் இருக்கும்போது துணிந்து விற்றுவிடுங்கள்.
வியூகம் 7
தரம், நிரந்தரம்! எப்போதும் தரமான நிறுவனப் பங்குகளையே வாங்குங்கள். கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்று சொன்னாலும் தரமற்ற நிறுவனப் பங்குகளை வாங்காதீர்கள்!
வியூகம் 8
பொறுமை கடலினும் பெரிது! தரமான பங்குகளை வாங்கிய பிறகு பொறுமையாகக் காத்திருங்கள்! (நினைவில் கொள்க: பங்கு முதலீடு என்பது சுவாரஸியமற்ற (தீஷீக்ஷீவீஸீரீ) விஷயம்.) குழந்தை பிறந்து, வளர்ந்து, படித்து சம்பாதிப்பதற்குக்கூட 21 வருடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. அவ்வாறு இருக்கும்போது குறைந்தது ஒரு ஐந்து வருடமாவது நாம் வாங்கிய பங்கினை வளர்வதற்கு அனுமதிக்க வேண்டாமா?
வியூகம் 9
நம்பினோர் கைவிடப் படார்! நீங்கள் அலசி ஆராய்ந்து வாங்கிய தரமான பங்குகள் ஒருபோதும் வீண் போகாது! நம்பிக்கையுடன் காத்திருங்கள். திடமான நம்பிக்கை இல்லாமல் (நீஷீஸீஸ்வீநீtவீஷீஸீ) பங்குகளை வாங்காதீர்கள்!

வியூகம் 10
இந்தியா ஒரு வளரும் நாடு என்பதால், டிவிடெண்ட் யீல்ட் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும், டிவிடெண்ட் யீல்டையும் பார்த்து பங்குகளை வாங்குங்கள். ஏனென்றால், ஆரம்ப காலங்களில் அது ஒன்றுதான் உங்களுக்கு அப்பங்கில் இருந்து கிடைக்கும் வருமானம்.
வியூகம் 11
இந்தியா ஒரு வளரும் நாடு என்பதால், டிவிடெண்ட் யீல்ட் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும், டிவிடெண்ட் யீல்டையும் பார்த்து பங்குகளை வாங்குங்கள். ஏனென்றால், ஆரம்ப காலங்களில் அது ஒன்றுதான் உங்களுக்கு அப்பங்கில் இருந்து கிடைக்கும் வருமானம்.
வியூகம் 11
|
உலகளவில் நிலம் மற்றும் தங்க முதலீட்டை விரும்பு
பவர்களில் தமிழர்கள் முன்னணியில் இருப்பார்கள் என நினைக்கிறேன். வேறு
முதலீடுகளைப்போல அவை களுக்கும் ரிஸ்க் உண்டு. ஆகவே, அவற்றில் மட்டுமே ஃபோக்கஸ் செய்யாமல், பங்கு முதலீட்டை
முன்னிலைக்குக் கொண்டு வாருங்கள்! பங்கு முதலீடு கடந்த இருபது
ஆண்டுகளில் சம்பாதித்துக் கொடுத்தது எக்கச்சக்கம். இன்னும் சம்பாதித்துக்
கொடுக்க வேண்டியது ஏராளம்!
பங்குச் சந்தை ஒரு கடல் போன்றது. நாம் படகை/கப்பலை எத்திசையில் செலுத்து கிறோமோ, அத்திசையில் செல்வதற்கு கடல் ஒரு தளமாக அமைகிறது. அதுபோல பங்குச் சந்தை நமக்கு ஒரு நல்ல தளம். அதை தளமாக உபயோகித்து நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிறிய உதாரணத்திற்கு 'பெல்’ (BHEL)போன்ற தரமான நிறுவனங்கள் தற்சமயத்தில் பல காரணங்களினால் மலிவான விலையில் கிடைக்கின்றன. எஃப்.பி.ஓ. வரும்போது இன்னும்கூட சற்று குறைய வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற தரமான நிறுவனங்களை நீண்ட கால முதலீட்டாளர்கள் குறித்துக் கொண்டு சிறுக சிறுக வாங்கிச் சேர்க்கலாம்!
பங்குச் சந்தை முதலீட்டில் தேர்ச்சி பெற்று ஒரு வெற்றிகர மான முதலீட்டாளர் ஆவதற்கு வருடங்கள் பல ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியூகம் சரிவரும். உங்களுக்கு எந்த வியூகம் பொருந்துகிறது என்று கூர்ந்து கவனித்து, தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் வியூகம் சரியா, தவறா என்பதை உங்களுக்கு கிடைக்கப் போகும் நஷ்டத்தைப் பொறுத்து தெரிந்து கொள்ளலாம்.
பங்குச் சந்தை ஒரு கடல் போன்றது. நாம் படகை/கப்பலை எத்திசையில் செலுத்து கிறோமோ, அத்திசையில் செல்வதற்கு கடல் ஒரு தளமாக அமைகிறது. அதுபோல பங்குச் சந்தை நமக்கு ஒரு நல்ல தளம். அதை தளமாக உபயோகித்து நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிறிய உதாரணத்திற்கு 'பெல்’ (BHEL)போன்ற தரமான நிறுவனங்கள் தற்சமயத்தில் பல காரணங்களினால் மலிவான விலையில் கிடைக்கின்றன. எஃப்.பி.ஓ. வரும்போது இன்னும்கூட சற்று குறைய வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற தரமான நிறுவனங்களை நீண்ட கால முதலீட்டாளர்கள் குறித்துக் கொண்டு சிறுக சிறுக வாங்கிச் சேர்க்கலாம்!
பங்குச் சந்தை முதலீட்டில் தேர்ச்சி பெற்று ஒரு வெற்றிகர மான முதலீட்டாளர் ஆவதற்கு வருடங்கள் பல ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியூகம் சரிவரும். உங்களுக்கு எந்த வியூகம் பொருந்துகிறது என்று கூர்ந்து கவனித்து, தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் வியூகம் சரியா, தவறா என்பதை உங்களுக்கு கிடைக்கப் போகும் நஷ்டத்தைப் பொறுத்து தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக