முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 33


முதற்படி முதலில் படி! - 33


ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
கடந்த சில வாரங்களாக பங்குகளை மதிப்பிடுவது எப்படி என்பது பற்றி கண்டறிந்தோம். இவ்வாரம் பங்குச் சந்தை வியூகம் (strategy) பற்றி பார்ப்போம். நம்மில் பலர் வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை சந்தித்திருப்போம். அது பள்ளியில் ஆகட்டும், கல்லூரியில் ஆகட்டும், வேலையில், தொழிலில், வாழ்க்கையில் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்று சற்று ஆராய்ந்து பாருங்கள். பெரும்பாலும் நீங்கள் கடைப்பிடித்த வியூகமாகத்தான் இருக்கும். இதனை சிலர் செயல்திட்டம் என்கிறார்கள். இன்னும் சிலர் உத்தி என்றும், தந்திரம் என்றும் சொல்கிறார்கள். நாம் வியூகம் என்போம்.
பொதுவாக வியூகம் என்பது எப்போது தேவை? போர்க்களத்தில்தான். போரில் எப்படி ஜெயிப்பது என்று வரும்போது நமக்கு ஒரு செயல்திட்டம் வேண்டும். இந்த செயல்திட்டத்தை நிறைவேற்ற வழி அமைத்துக் கொடுப்பதுதான் வியூகம். பங்குச் சந்தை என்பது ஒரு போர்க்களம் என்று சொல்கிற அளவுக்கு பயங்கரமான விஷயமில்லை என்றாலும், நீங்கள் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர் ஆவதற்கு சரியான வியூகம் தேவை. பங்குச் சந்தை முதலீட்டில் பலரும் பலவிதமான வியூகங்களைப் பயன்படுத்துவார்கள். மிகக் குறுகிய காலம், குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என முதலீட்டாளரின் கால அளவைப் பொறுத்து வியூகம் மாறுபடும். நாம் இங்கு பார்க்கப் போவது நீண்டகால (ஐந்து வருடத்திற்குமேல்) முதலீட்டாளர்களுக்கான வியூகத்தைப் பற்றித்தான்.
இத்தொடரில் சில மாதங்களுக்கு முன்பு வெவ்வேறு முதலீட்டு யுக்திகள் பற்றி குறிப்பாக குரோத் இன்வெஸ்ட்டிங், வேல்யூ இன்வெஸ்ட்டிங், கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் மற்றும் பேஸிவ் இன்வெஸ்ட்டிங் குறித்துப் பார்த்தோம். இவற்றிற்கும் மேலாக பொதுவான வியூகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
வியூகம் 1
அன்றாட வாழ்விற்கு மற்றும் குறுகிய காலத்திலேயே தேவைப்படக்கூடிய பணத்தை பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள்.
வியூகம் 2
போர்ட்ஃபோலியோ அலோகேஷன் என்பது மிக முக்கியமான ஒன்று. உங்களது போர்ட்ஃபோலியோவில் அவசரத் தேவைக்கான லிக்விட் பணம், நிரந்தர வைப்புநிதி திட்டங்கள், அரசாங்க பாண்டுகள், நிலம், தங்கம், பங்குகள் என அனைத்தும் வயதிற்கேற்ப/தேவைகளுக்கு ஏற்ப இருக்கட்டும்.
வியூகம் 3
போர்ட்ஃபோலியோ பேலன்ஸிங் என்பது முக்கியமான ஒன்று. உங்கள் வயதிற்கேற்ப, ரிஸ்க் எடுக்கும் திறனிற்கேற்ப, உங்கள் செல்வத்தின் மதிப்பிற்கு ஏற்ப உங்களது போர்ட் ஃபோலியோவை வருடத்திற்கு ஒரு முறையாவது பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள்.
வியூகம் 4
நீங்கள் பங்குச் சந்தைக்கு புதியவராக இருக்கும் பட்சத்தில், பெரிய நிறுவனப் பங்குகளில் அல்லது உங்களுக்கு மிகவும் பரிச்சயமான நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். நிறுவனங்கள் பற்றிய பரிச்சயம் இல்லாதவர்கள் இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யலாம்.
வியூகம் 5
நீங்கள் விரும்பிய பங்குகளை விரும்பிய விலையிலேயே வாங்குங்கள். விரட்டிச் சென்று வாங்காதீர்கள்.
வியூகம் 6
பங்கின் உண்மையான மதிப்பைவிட விலை குறைவாகக் கிடைக்கும்போது மட்டுமே வாங்குங்கள். அதேபோல் பங்கின் விலை உச்சத்தைத் தொட்டு, எந்தவிதமான வேல்யூவேஷன் வரம்புக்குள்ளும் வராமல் இருக்கும்போது துணிந்து விற்றுவிடுங்கள்.
வியூகம் 7
தரம், நிரந்தரம்! எப்போதும் தரமான நிறுவனப் பங்குகளையே வாங்குங்கள். கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்று சொன்னாலும் தரமற்ற நிறுவனப் பங்குகளை வாங்காதீர்கள்!
வியூகம் 8
பொறுமை கடலினும் பெரிது! தரமான பங்குகளை வாங்கிய பிறகு பொறுமையாகக் காத்திருங்கள்! (நினைவில் கொள்க: பங்கு முதலீடு என்பது சுவாரஸியமற்ற (தீஷீக்ஷீவீஸீரீ) விஷயம்.) குழந்தை பிறந்து, வளர்ந்து, படித்து சம்பாதிப்பதற்குக்கூட 21 வருடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. அவ்வாறு இருக்கும்போது குறைந்தது ஒரு ஐந்து வருடமாவது நாம் வாங்கிய பங்கினை வளர்வதற்கு அனுமதிக்க வேண்டாமா?
வியூகம் 9
நம்பினோர் கைவிடப் படார்! நீங்கள் அலசி ஆராய்ந்து வாங்கிய தரமான பங்குகள் ஒருபோதும் வீண் போகாது! நம்பிக்கையுடன் காத்திருங்கள். திடமான நம்பிக்கை இல்லாமல் (நீஷீஸீஸ்வீநீtவீஷீஸீ) பங்குகளை வாங்காதீர்கள்!
வியூகம் 10
இந்தியா ஒரு வளரும் நாடு என்பதால், டிவிடெண்ட் யீல்ட் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும், டிவிடெண்ட் யீல்டையும் பார்த்து பங்குகளை வாங்குங்கள். ஏனென்றால், ஆரம்ப காலங்களில் அது ஒன்றுதான் உங்களுக்கு அப்பங்கில் இருந்து கிடைக்கும் வருமானம்.
வியூகம் 11

உலகளவில் நிலம் மற்றும் தங்க முதலீட்டை விரும்பு பவர்களில் தமிழர்கள் முன்னணியில் இருப்பார்கள் என நினைக்கிறேன். வேறு முதலீடுகளைப்போல அவை களுக்கும் ரிஸ்க் உண்டு. ஆகவே, அவற்றில் மட்டுமே ஃபோக்கஸ் செய்யாமல், பங்கு முதலீட்டை முன்னிலைக்குக் கொண்டு வாருங்கள்! பங்கு முதலீடு கடந்த இருபது ஆண்டுகளில் சம்பாதித்துக் கொடுத்தது எக்கச்சக்கம். இன்னும் சம்பாதித்துக் கொடுக்க வேண்டியது ஏராளம்!
பங்குச் சந்தை ஒரு கடல் போன்றது. நாம் படகை/கப்பலை எத்திசையில் செலுத்து கிறோமோ, அத்திசையில் செல்வதற்கு கடல் ஒரு தளமாக அமைகிறது. அதுபோல பங்குச் சந்தை நமக்கு ஒரு நல்ல தளம். அதை தளமாக உபயோகித்து நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிறிய உதாரணத்திற்கு 'பெல்’ (BHEL)போன்ற தரமான நிறுவனங்கள் தற்சமயத்தில் பல காரணங்களினால் மலிவான விலையில் கிடைக்கின்றன. எஃப்.பி.ஓ. வரும்போது இன்னும்கூட சற்று குறைய வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற தரமான நிறுவனங்களை நீண்ட கால முதலீட்டாளர்கள் குறித்துக் கொண்டு சிறுக சிறுக வாங்கிச் சேர்க்கலாம்!
பங்குச் சந்தை முதலீட்டில் தேர்ச்சி பெற்று ஒரு வெற்றிகர மான முதலீட்டாளர் ஆவதற்கு வருடங்கள் பல ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியூகம் சரிவரும். உங்களுக்கு எந்த வியூகம் பொருந்துகிறது என்று கூர்ந்து கவனித்து, தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் வியூகம் சரியா, தவறா என்பதை உங்களுக்கு கிடைக்கப் போகும் நஷ்டத்தைப் பொறுத்து தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...