முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 38


முதற்படி முதலில் படி! - 38


கடந்த பல வாரங்களாக பங்குச் சந்தை குறித்த அடிப்படை விஷயங்களை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். நீண்டகால முதலீட்டை லாபகரமாகச் செய்ய நான் சொல்லி இருக்கும் விஷயங்களே போதுமானவை. சந்தையில் நிகழும் மாற்றங்களை செய்தித்தாள்கள் படிப்பதன் மூலம் அறிந்து உங்கள் அறிவை தொடர்ந்து பெருக்கிக் கொள்ளுங்கள். பங்குச் சந்தையில் பாதுகாப்பான முறையில் கணிசமான லாபத்தைச் சம்பாதிக்க வாழ்த்துக்கள்! பங்குச் சந்தை தொடர்பான ஆரம்பப் பாடங்கள் முடிந்து விட்ட நிலையில், இனி உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களைக் கேட்கலாம் என கடந்த இரண்டு இதழ்களில் அறிவித்ததைத் தொடர்ந்து, பல ஆயிரம் வாசகர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றுக்கு இங்கே பதில் சொல்கிறேன்.
இளங்கோ கண்ணன், மதுரை.
என் மகன் இப்போது 9-ம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு பங்குச் சந்தையை அறிமுகப்படுத்தி, அடிப்படையான விஷயங்களைக் கற்றுத் தரலாமா?
''
தாராளமாக! இன்னும் சிறு வயதில்கூட அறிமுகப் படுத்தலாம். ஆனால், ஒரு நீண்டகால முதலீட்டாளராக அறிமுகப்படுத்துங்கள்; தினசரி டிரேடராக/ ஸ்பெக்கு லேட்டராக பங்குச் சந்தையை அறிமுகப்படுத்தாதீர்கள்! பங்குச் சந்தையை ஒரு விளையாட்டாக விளையாடி குழந்தைகளுக்கு கற்றுத் தர விரும்புகிறவர்கள் http://www.neopets.com/ என்கிற இணையதளத்திற்குள் சென்று ஸ்டாக் மார்க்கெட் என்று தேடினால் உங்களுக்கு அற்புதமான ஒரு விளையாட்டு கிடைக்கும். இதில் உலக நிதிச் சந்தையைப் பற்றிய அறிவையும், அது எவ்வளவு இன்றியமையாதது என்பதையும், அதில் அவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றது என்பதைப் பற்றியும் கற்றுத்தரும்.''
எஸ்.விவேகானந்தன், கரூர்.

நான் வங்கித் துறை, மருத்துவத் துறை பங்குகளில் மட்டுமே முதலீடு செய்து வருகிறேன். இந்த என் அணுகுமுறை சரியா?
''ஒரு சாதாரண முதலீட் டாளர் பல துறைகளைச் சேர்ந்த பங்குகளில் முதலீடு செய்வதே சரியான முடிவாகும். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, துறைகளின் வளர்ச்சியில் சுழற்சி இருக்கும். உதாரணமாக, கடந்த சில ஆண்டுகளாக இன்ஃப்ரா துறை அடிபட்டு இருக்கிறது. அதே சமயத்தில் எஃப்.எம்.சி.ஜி., பார்மா மற்றும் வங்கித் துறைகள் நன்றாக வளர்ந்துள்ளன. அடுத்த சுழற்சியில் இது மாறலாம். எனவே, அதை அறிந்து முதலீடு செய்யவும். நீங்கள் இந்த இரு துறைகளில் மட்டுமே முதலீடு செய்ய விரும்பினால், அத்துறை எப்போதெல்லாம் அடிபடுகிறதோ, அப்போது மட்டுமே வாங்கவும். மேலும், இந்த இரு துறைகளில் மட்டுமே முதலீடு செய்யும்போது அவற்றைப் பற்றிய பரிச்சயம் உங்களுக்கு அதிகமாக இருப்பதும் அவசியம்!''
எல்.மாசிலாமணி, திருச்சி-5
நான் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். பங்குச் சந்தை ஓய்வு பெற்றவர்களுக் கானதல்ல என்கிறார்கள். ஆனால், என் நண்பர்கள் பலரும் பங்குச் சந்தையில் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள். எனக்கு ஆசையாக இருக்கிறது. நானும் முதலீடு செய்யவா?
''
பங்குச் சந்தை முதலீடு பலருக்கும் பல வகைகளில் உதவுகிறது. சில ஓய்வு பெற்றவர்கள் தங்களின் நேரத்தைச் செலவழிப்பதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். நீங்கள் வசதியானவர் (உங்களின் அன்றாடத் தேவைகளுக்கு மேல் உங்களிடம் பணம் இருக்கும் பட்சத்தில்) என்றால், பங்குச் சந்தையினால் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்காது என்றால் நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். உங்கள் அன்றாட தேவைகளுக்கான பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யாதீர்கள். டே டிரேடிங் கிலும் ஈடுபடாதீர்கள்.''
எம்.அர்ஜுன், சென்னை.
நான் லாங் டைம் இன்வெஸ்டர். '2,500 ரூபாய் கட்டினால் டெக்னிக்கல் அனாலிசிஸ் சொல்லித் தருகிறோம்... நிறைய லாபம் பார்க்க முடியும்என்று எனக்கு அடிக்கடி அழைப்பு விடுக்கிறது ஒரு நிறுவனம். இத்தகைய வகுப்புகளுக்கு போவது நல்லதா?
''
எத்துறையிலும் அறிவைப் பெருக்கிக் கொள்வது நல்லதே! உங்களிடம் பணம், விருப்பம் மற்றும் நேரம் இருக்கும்பட்சத்தில் நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள். அதனால் நல்ல லாபம் பார்க்கிறீர்களா இல்லையா என்பதுதான் கேள்வி. முதலில் மேக்ரோ மற்றும் மைக்ரோ எக்கனாமியைப் பற்றி கற்றுக் கொள்ளுங்கள். பிறகு நிறுவனங்களின் ஆபரேஷன்ஸ் மற்றும் நிதி நிலைமை குறித்து ஆராயக் கற்றுக் கொள்ளுங்கள். மூன்றாவதாக, டெக்னிக்கல் அனாலிசிஸை கற்றுக் கொள்ளுங்கள். வெறும் டெக்னிக்கல் அனாலிசிஸை மட்டுமே வைத்து பணம் சம்பாதிப்பது கடினமே!''
காயத்ரி சிவராமன், அம்பத்தூர்.
பங்குச் சந்தையில் நான் சொல்கிறபடி முதலீடு செய்யுங்கள். 100% வருமானம் நிச்சயம் என்று அடித்துச் சொல்கிறார் ஒருவர். அவரை நம்பி 2 லட்ச ரூபாய் பணத்தைப் போடலாமா?
''
சில இதழ்களுக்கு முன்பு இதுபற்றி தெளிவாக குறிப்பிட்டி ருந்தேன். என்னுடைய பதில், ஒரு போதும் செய்யாதீர்கள் என்பதே! 100% லாபம் சம்பாதிப்பது உறுதி என்றால், அந்த லாபத்தை அவரே சம்பாதித்துக் கொண்டு போகலாமே! மற்றவர்களுக்கு கொள்ளை லாபம் சம்பாதித்துத் தரவேண்டும் என்று அவருக்கு வேண்டுதலா என்ன? சமீபகாலமாக சிலர் இன்னொரு புது டெக்னிக்கையும் பயன்படுத்தி வருகிறார்கள். 100 சதவிகித லாபம் நிச்சயம் என்பதோடு  நிற்காமல், நஷ்டத்தில் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும், இதை பத்திரத்தில் எழுதித் தரத் தயார் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இந்த பத்திரத்தை எங்கும் ரிஜிஸ்டர் செய்ய முடியாது. எனவே, நாளைக்கு உங்களுக்கு நஷ்டம் வந்தால் உங்களால் எங்கும் புகார் செய்ய முடியாது. எனவே, ஜாக்கிரதை!''
டி.நவநீத கிருஷ்ணன், காங்கேயம்.
நான் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறேன். டே டிரேடிங்கில் சராசரியாக ஒரு நாளைக்கு 500 ரூபாய் லாபம் பார்க்கிறேன். நான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக டே டிரேடிங் செய்யலாமா?
''
உறுதியாகச் செய்யாதீர்கள்! டே டிரேடிங்கில் தொடர்ந்து சம்பாதித்தவர்கள் உலகில் வெகு சிலரே! அதில் உறுதியாக லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதுநாள் வரை உங்களுக்கு கிடைத்தது தற்செயலான விஷயமாக இருக்கலாம். அதையே சாஸ்வதம் என்று நினைத்து, வேலையை விட்டீர்கள் எனில் மாட்டிக் கொள்வீர்கள்.''
எஸ்.முத்துசாமி, அம்பாசமுத்திரம்.
நான் கடந்த மூன்று மாதத்திற்கு முன்புதான் பங்குச் சந்தை வணிகத்தில் இறங்கினேன். அதுவும் மாதம் மூன்று பங்குகள் என்கிற அடிப்படையில் கோல் இந்தியா நிறுவனப் பங்குகளை வாங்கியுள்ளேன். நீண்ட கால முதலீட்டிற்கு இதே அடிப்படையில், தொடர்ந்து ஒரே நிறுவன பங்குகளை மட்டும் வாங்கினால் சரியான அணுகுமுறையாக இருக்குமா? அல்லது வெவ்வேறு நிறுவன பங்குகளை வாங்கலாமா?
''
நிலக்கரி நம் நாட்டிற்கு எப்போதும் தேவையான ஒன்றுதான். அதனால், அந்நிறுவனத்தின் பங்குகள் நீண்ட காலத்தில் நன்றாகச் செயல்படும். இருந்த போதிலும் உங்களது ரிஸ்க்கை குறைத்துக் கொள்வதற்காக, கோல் இந்தியா நிறுவனத்தைப் போன்ற பெரிய பங்குகள் இன்னும் சிலவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள் (உதாரணத்துக்கு எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., ஓ.என்.ஜி.சி., எல் அண்ட் டி.) உங்கள் ரிஸ்க் குறைந்து, நீண்டகால நோக்கில் நல்ல பலன் கிடைக்கும்.''
முற்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...